சுய விருப்ப கதைகள்
1.K2K -00002 15 ஆம் தலைப்பு ஒரு குட்டிக்கதை அந்தி பகலில் வானம் மேக மூட்டத்துடன் மாலை பொழுது போல சிறிது துளி மழை தூறல் என்மேல் பட தென்றல் காற்று ஜில்லென்று வீச எனது மேனி சிலிர்க்க இயற்கையின் காட்சியை ரசித்து கொண்டே " சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ " என பாடலை முணுமுணுத்துக் கொண்டு கடற்கரை அலையை ரசித்தவாரு நடந்து போய்க் கொண்டுருந்தேன் . எனக்கு எதிரில் வடமாநிலத்து சிறிய பெண் குட்டி குரங்குடன் விளையாடிக் கொண்டிருக்க அதையும் ரசித்தப்படி சிறிது தூரம் தான் போயிருப்பேன் அந்தக் குட்டி குரங்கு என் பின்னாளில் இருந்து துப்பட்டாவை இழுக்க நான் அதிர்ந்து விட்டேன் அந்த ஒரு நொடி . குரங்கு என்னை பார்த்து புன்னைகைத்தது நான் அதை தடவிக் கொடுத்து என்னிடம் இருந்த ரொட்டி பொட்டலத்தை எடுத்து அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தேன் . இருவரும் சாப்பிட்டார்கள் எனக்கு ஒருவித சந்தோஷத்தையும் மனசும் நிம்மதியாகவும் இருந்தது . அங்கிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன் , அங்கு ஒருத்தர் ...