சுய விருப்ப கதைகள்

1.K2K -00002

 15 ஆம் தலைப்பு ஒரு குட்டிக்கதை 

அந்தி பகலில் வானம் மேக மூட்டத்துடன் மாலை பொழுது போல சிறிது துளி மழை தூறல் என்மேல் பட தென்றல் காற்று ஜில்லென்று வீச எனது மேனி சிலிர்க்க இயற்கையின் காட்சியை ரசித்து கொண்டே "சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ" என பாடலை முணுமுணுத்துக் கொண்டு கடற்கரை அலையை ரசித்தவாரு நடந்து போய்க் கொண்டுருந்தேன்.

எனக்கு எதிரில் வடமாநிலத்து சிறிய பெண் குட்டி குரங்குடன் விளையாடிக் கொண்டிருக்க அதையும் ரசித்தப்படி சிறிது தூரம் தான் போயிருப்பேன் அந்தக் குட்டி குரங்கு என் பின்னாளில் இருந்து துப்பட்டாவை இழுக்க நான் அதிர்ந்து விட்டேன் அந்த ஒரு நொடி. குரங்கு என்னை பார்த்து புன்னைகைத்தது  நான் அதை தடவிக் கொடுத்து என்னிடம் இருந்த ரொட்டி பொட்டலத்தை எடுத்து அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தேன். இருவரும் சாப்பிட்டார்கள் எனக்கு ஒருவித சந்தோஷத்தையும் மனசும் நிம்மதியாகவும் இருந்தது.

அங்கிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன், அங்கு ஒருத்தர் வேறு ஒருவரிடம் பிக்பாக்கெட் அடிக்கிறதை பார்த்துவிட்டேன் ஆனால் என்ன செய்வதுனு தெரியாமல் விழிபிதுங்கி நின்றேன். டீ கடை உரிமையாளரும் இதைப்பார்த்து கொண்டிருப்பார் போல அந்த திருடனை பிடித்து அவன் திருடுன பணத்தை உரிமையாளரிடம் சேர்த்துவிட்டு அடிக்காமல் அவனை விசாரித்தனர். அவன் அதற்கு சொன்ன பதில் எல்லோர்க்கும் நெஞ்சை உலுக்கியது என்னைவென்றால் அவனுடைய அப்பா "ஒரு வாரத்துக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இருதய ஆபரேஷன்காக பணம் தேவைப்படுகிறது எங்கு வேலை கேட்டாலும் உனக்கெல்லாம் இங்கு வேலை தரமுடியாது அடிக்காத குறையாக அனுப்பிவிட்டனர். ஒருவர் வேலை தருவதாக கூறி என்னை நம்பவைத்து திருட்டு தொழில் சேர்த்துவிட்டார் அவரிடம் நான் சிறிது பணம் கொடுத்தாலும் இன்னிக்கு இவ்ளோ தான் போனி பார்த்தியா என்று கேட்டு அடிப்பார் இல்லையென்றால் தகாத வார்த்தைகளால் திட்டுவார். என கண்ணீர் மல்க என்னை காப்பாற்றுங்கள் எனக் கதறினான் அங்கு வந்த போலீஸ்காரர் என்ன எதுன்னு விசாரித்து மனுதாபிமானத்துடன் செயல்ப்பட்டதால் அவனுடைய வாழ்க்கை மீண்டும் பிரகாசமானது. "நீங்கள் எப்படி என யோசித்தால் இதோ பதில் " போலீஸ் தேடிவரும் முக்கிய குற்றவாளி அந்த குற்றவாளியை இவன் பிடித்த கொடுத்தமையால் அவனுக்கு போலீஸ் வேலையும் கிடைத்தது. அவனுடைய அம்மாவையும் காப்பாற்றி தன்னுடைய குடும்பத்தை நல்லபடியாக கவனித்து தன்னுடைய வேலையில் கடமை தவறாது நேர்மையாக உழைத்து உயர்ந்த பதவி சென்றதும் வெற்றியின் கொடியை நிலை நாட்டினான்..! 

நெறி: மனிதனாக வாழ்வது எளிது..!!

மனிதாபிமானத்துடன் வாழ்வது தான் பெரிது..!!!.

-- லக்ஷ்மி பிரியா-

 

 

2.K2K-00013 

ஆவிகளும் ஆத்மாக்களும்

இந்த தலைப்பைப் தேர்ந்தெடுக்கும்போதே, எனக்கே சிறிது "அல்லாகத்" இருந்தது. இருந்தாலும் சிறுவயது முதல் எனக்கும் சுற்றியிருந்தவர்களுக்கு ஏற்பாட்டை வினோதமான அனுபவங்களைகே கேட்டும் இக்கதை புனையப்பட்டது.

ரவிணாவிற்கு, சிறுவயது முதலே அமானுஷ்யமான கதைகளைக் கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தாள் ஒரு சமயம் அவளுடைய இரு அக்காக்களும் பெற்றோர் இல்லாத வேளையில் அட்சரப்பலகைக் கொண்டு ஆவிகளோடு?! அல்லது இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேச முற்படுவதை ஒளிந்திருந்துப் பார்த்திருக்கின்றாள். அன்றிலிருந்து ரவினாவிற்கும் அவ்வாறு அழைத்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதின் அடித்தளத்தில் தங்கிவிட்டன. இப்பொழுது மனநல மருத்துவமனை பின்பு மக்களின் "மனவலியை", தினந்தோறும் கேட்பதாலும், அவளுக்கு மனத்திர்ற்கும் ஆவி, ஆத்மா போன்றவற்றைப் பற்றி மேலும் விருப்பமாகி தன் நண்பனுடன் சேர்த்துக்கொண்டு மும்முரமாக அதன் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள்.

ஒரு நாள் மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக இரவு எட்டுமணியளவில் கிளம்பிவீட்டிற்கு செல்ல நேரிட்டது வானம் மேகமூட்டத்துடன், மலை வரும் போல் இருந்தது. ரவினா தன் இருசக்கர வாகனத்தை சற்றே வேகம் கூடி சென்றுக் கொண்டிருந்த போது சாலியின் நடுவே ஒரு பாத்திமான்ன்று வயது சிறுமி வண்டியை நிறுத்தும்படி கூறினாள். மனதில் லேசாக பயம் வர இருந்தாலும் வண்டியை ஓரம் காட்டினாள் அச்சிறுமி உடனே கண்ணீருடன் " அக்கா என் அம்மாவிற்கு விபத்துள்ளாகி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்னை உங்கள் வண்டியில் ஏற்றி மருத்துமனையில் கொண்டு போய் விடுங்கள் எனக் கெஞ்ச ரவிணாவும் இரக்க்கப்பட்டு எந்த மருத்துவமனை என வினவ அவள் பணிபுரியும் மருத்துவமனையின் பேரைச் சொன்னால் ரவிணாவும் தன் தொலைபேசியில் பெற்றோருடன் தொடர்புக் கொண்டு வருவதற்கு சிறுது நேரம் ஆகும் என்று கூறிவிட்டு மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்றால் அந்த சிறுமியும் உடனே வெண்டையை விட்டு இறங்கி "ரொம்ப தாங்க்ஸ்" அக்கா என்று சொல்ல ரவிணாவும் உன் பெயரென்ன என்று கேட்க அவளும் தன் பெயர் 'ராகினி' என்று கூறிவிட்டு உள்ளே  சென்றுவிட்டாள். திரும்பி ரவிணா வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவள் வீட்டிற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் பாலம் உடைந்து பல வாகனங்கள் விபத்துக்குள்ளாய் இருந்தன. அந்தப் பெண் மட்டும் தன்னை திரும்ப அழைத்துப் போகவில்லை என்றால் தானும் இந்த விபத்தில் சிக்கியிருப்போம் என்று நினைத்தபோது அவளது உடல் ஒரு முறை அதிர்ந்தது.

மறுநாள் வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்றவுடன், அங்கிருந்த பணியாளரை நோக்கி " நேற்று ராகினி என்ற சிறுமியின் அம்மா எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கேட்கவும் பணியாளர் அவளை வினோதமாகப் பார்த்தார் " ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று ரவிணா கேட்க அதற்கு அவர் "நேற்று மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டது ராகினி என்ற சிறுபெண் அவள் நேற்றிரவு இறந்துவிட்டாள்  அவளுடைய உடல் பெறுவதற்கு அவள் அம்மாவும் உறவினர்களும் வெளியில் இருக்கிறார்கள் என்று சொல்ல இரண்டாவது முறையாக ரவிணாவின் உடலும் உள்ளமும் ஒரு சேர அதிர்ந்தன அப்படியானால் நம்மை காப்பாற்றிய ராகினி விபத்தில் உயிரை இழந்த ஆவியா இல்லை தனக்கு உதவியதால் அவளுடைய ஆத்மாவா என்று வெகு நேரம் விடைத்த தெரியாமல் ரவிணா இன்று வரை தவித்துக்கொண்டுஇருக்கின்றாள் இக்கதை படித்த உங்களுடைய விடை என்னவாக இருக்கும்?!!!

- ரமா கோவிந்தராஜன் (க்ராப்ஸ்)

 

 

3.K2K00038

கொரோனாவா?! குடியா?!

தவிடு ஒரு கூலித் தொழிலாளி, மூட்டை சுமப்பது கை வண்டி இழுப்பது கடைகளில் வாசலைக் கூட்டி சுத்தம் செய்வது கட்டிட வேலை செய்யும் இடங்களில் எடுபிடி வேலைகள் செய்வது என்று கிடைத்த வேலையை மனநிலைக்கு ஏத்த மாதிரி செய்வான்.

 அவனுக்கென குடும்பம் இருந்தது, வயசான அம்மா மனைவி பிள்ளைகள் இருவர், அவர்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் தீப்பெட்டி ஒட்டியோ காடு கரைகளில் வேலை பார்த்தோ சம்பாதிக்கவே செய்தனர்.

இவன் வாங்கும் சம்பளத்தில் பாதி தான் வீட்டுக்கு வரும், பாதி டாஸ்மாக்கிற்கு போய் விடும், முதல் நாள் இரவு குடித்த போதை மிச்சமிருக்க காலை எழுந்திருக்கும் போதே தலைவலி தவிடனுக்கு.

துரை எந்திருக்கவே லேட்டானா என்ன வேலைக்குத் தான் போகுறது?!” தவிடனின் பொண்டாட்டி சுப்பு அம்மியில் அரைத்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள்“. காலங்காத்தால அவன் பேச்சை ஏன் பேசுற எதையாவது திங்கக் குடுத்து அனுப்பு.பாதி போதையில ஏதாவது சண்டைக்கு வருவான்”, தவிடனின் அம்மா கோமதி   மகனின் புத்தி தெரிந்து எச்சரிக்கிறாள்.

ஆமா அதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை, குடிசை ஒழுகுது குடிக்கிறதை குறைச்சுகிட்டு காசு கொண்டு வான்னு சொன்னால் கேட்குதாதினம் பாதியை அந்த பாழாப் போன டாஸ்மாக்ல குடுத்தத்தான் கடன் தீரும்னு இருந்தால் என்ன பண்றது….?!”

சுப்பு பேசுறதைக் கேட்டுகிட்டே சட்டையைப் போட்ட தவிடன்'” ஆமா இவள் அப்பன் வீட்ல போய் வாங்கியாறது தான?! வக்கத்தவ பேசுறா பேச்சுஎன கத்துகிறான்.

இந்தா பிள்ளைகளா இந்தா பைக்கட்டை தூக்கிட்டு பள்ளிக்கோடம் போங்க. புள்ள சுப்பு உன்னையும் தான்  வெரசா கிளம்பு….வீட்ல இருந்தா பிரச்சனை தான்னு விரட்டுறாள் கோமதி.

தவிடன் சரியான முரடன், ஐஞ்சாங்கிளாஸ் தான் படிச்சிருக்கான், கோமதிக்கு ஒரே பையன்.அதுனால அவனோட அப்பன் சுந்தரம் அவனைஅடிக்காம திட்டாம செல்லமா வளர்த்தாரு.அவர் இருக்கிற வரை இவன் வேலைக்கே போகலை.சொந்த அத்தை மகள் சுப்பு.மாமனை நம்பி இந்த வீட்டுக்கு தவிடனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாள்.

மவராசன் சுந்தரமும் மருமகளை ஒரு குறையும் இல்லாம பாத்துக்கிட்டாரு.

மாமா இவரு இப்பிடியே வேலைக்குப் போகாம இருந்தா எப்பிடி பொழைப்பு நடத்துறது”, “ஏன் தாயி இங்க உனக்கென்ன குறைச்சல் எல்லாம் மாமா செய்றேன்..மா

இன்னைக்கு செய்வீங்க, நாளைக்கு ஒரு கோபம் தாபம்னு வந்தால் தாங்க முடியுமா?!"

"சரி நான் பேசுறேன்.நீ சண்டை போடாத"

இவன் வேலைக்குப் போன நேரமோ என்ன கருமமோ நல்லா இருந்த சுந்தரம் பொசுக்குன்னு மாரடைப்புல செத்துப் போறாரு.

தன்னை செல்லமா வளர்த்த அப்பன் இறந்ததும் தான் இந்த தவிடன் இப்பிடி குடிகாரனா மாறிப் போனான்.

அப்பன் செத்த சோகத்துல குடிக்கிறான்னு சுப்புவும் கோமதியும் பேசாம இருக்க பிள்ளைங்க பிறந்ததுக்கு அப்புறமும் குடியை விடாம குடிக்கு அடிமையாகிப் போனான்.

குடிக்க ஆரம்பிச்சதும் முரட்டுத்தனமும் முன் கோபமும் கூடவே தொத்திக்கிச்சு, கடைசியில குணம் கெட்டவனா ஆயிட்டான்.

எதையாவது நினைச்சுகிட்டு சுப்பு கூட சண்டை போடுவான்.

குடிக்காதன்னு சொன்னால் கேட்க மாட்டான், குடிக்கிறதுக்கு காசு இல்லைன்னா வீட்ல இருக்கிற பண்ட பாத்திரங்களை வித்து குடிச்சுட்டு வருவான்.

அன்னைக்கு எப்பவும் போல ஆளுக்கோரு பக்கமா வேலைக்குப் போயிட்டு பொழுது சாய வீட்டுக்கு வர்றாங்க, வழக்கம் போல குடிச்சுட்டு வந்த தவிடன்,” சுப்பு! நாளைக்கு எந்த வேலையும் நடக்காதாம்.சும்மா வேலைக்குப் போன்னு எழுப்பாதநான் நல்லாத் தூங்க போறேன்

ஒன் மூஞ்சிஇப்பவும் இப்பிடி அறிவில்லாம குடிச்சுட்டு வர்றீயே ஊரெல்லாம் கொரோனா பரவுதுன்னு முழு அடைப்பு விட்டிருக்காங்க, தினக்கூலி வேலை பாக்குற நாம இருக்கிறதை வச்சு எப்பிடி கஞ்சி குடிக்கிறதுன்னு நான் தவிச்சுகிட்டிருக்கேன்.” னு புலம்புறாள் சுப்பு.

எத்தனை நாளைக்கு மா அடைப்பு?!”

தெரியலத்தைஒரு வாரம் பத்து நாள் இருக்கும்னு பேசிக்கிறாங்க. வீட்டுக்குள்ள தான் இருக்கணுமாம்.யாரு கூடவும்  முகத்தை மூடாம பேசக் கூடாதாம்.யாரையும் தொடக் கூடாதாம்.”

பத்தாவது நாள் இருக்கிறதை வச்சு பிள்ளைகளுக்கு ஆக்கிப் போடுறாள் சுப்பு, தவிடனுக்கு குடிக்க முடியலையே கடை திறக்கலையேன்னு ஆத்திரம்.” நீ தான் தினம் கருவருத்தஇப்ப பாரு பத்து நாளாச்சு.நிம்மதியே இல்லாம போச்சு

ஆமா அது தான் முக்கியம், அடுத்த வேளை பிள்ளைக பசிக்குதுன்னு வந்தால் எதை வச்சு ஆக்கிப் போடுறதுன்னு திண்டாடுறேன், இவருக்கு அந்தக் கவலை இருக்கா?!”

ஏற்கனவே குணம் கெட்ட தவிடன் குடிக்க முடியலைன்ற ஆத்திரத்துல வீட்லயே கிடக்கிறதால தினம் சுப்பு கூட சண்டை போடுறான்.

ஒரு மாதம் அந்த ஏழைக் குடிசையில் ஒரு வேளை இரண்டு வேளைக்கு அரைகுறையா அடுப்பு எறிஞ்சு கால் வயிறு அரை வயிறு நிறையுது.

இவங்களைப் போல பல வீடுகள்ல நிலைமை இப்படித்தான் இருக்குது, எல்லாம் தினக்கூலிங்க கட்டட வேலை நூறு நாள் வேலைத் திட்டம் கடைகள் இல்லாதது இப்பிடி இருந்தால் எந்த வேலைக்குப் போவாங்க எப்படி காசு வரும்?!

நாற்பது நாள் ஆச்சு அவசரத் தேவைக்கு மருந்து வாங்கவோ கிழிஞ்ச துணிமணிகளுக்கு மாத்தா வேற துணிமணிகள் வாங்கவோ லைட்டு பேனு ரிப்பேர் பண்ணவோ முடியாம இருக்கிறதை வச்சு கதியேன்னு வாழ்ந்துகிட்டிருக்காங்க மனுசங்க. இந்த இக்கட்டான நேரத்துல ஒரு நாள்,” அண்ணே டாஸ்மாக் திறந்திருக்கு.வெரசா வான்னு குரல் கொடுத்துக்கிட்டே ஓடுறான் பக்கத்து வீட்டு சிவா.

குப்புறப்படுத்து தந்தரையைப் பார்த்துக்கிடந்த தவிடன் தடால்புடால்னு எழுந்திருக்கிறான்.” …..சுப்பு! எங்கடி போனன்னு அலறுறான்.

என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு ஓடி வந்த சுப்பு கைலி விழுந்தது கூட தெரியாம நிக்கிற புருஷனைப் பார்த்து பதறுறாள்.

என்னா ஏன் இப்பிடி நிக்க?! நெஞ்சு வலிக்குதா?! என்ன வேணும்?!”

…..டாஸ்மாக் திறந்துட்டாங்களாம் எனக்கு நூறு ரூபா குடு

உன் தலையில கொள்ளி வைக்க, பிள்ளைகளுக்கு பசிக்குது இன்னைக்கு பொழுதுக்கு யார்கிட்ட கேப்போம்னு தவிச்சுகிட்டிருக்கேன், புத்திகெட்ட மனுசனுக்கு பொழப்பு பாரு?!”

ஐயோ பேசிக்கிட்டிருக்காளே நான் என்ன செய்வேன் டாஸ்மாக்ல கூட்டம் வந்துருமே?! காசுகாசுக்கு எங்க போவேன்?! பித்தனைப் போல புலம்பி வீட்டையே சுத்தி சுத்தி வர்றான் தவிடன்.

திடீர்னு சுப்புகிட்ட போனவன் அவள் கழுத்துல இருந்த தாலியை அறுத்துகிட்டு ஓட்டமெடுக்கிறான்.

அடப்பாவி கட்டுனவனே தாலியை அறுக்கிறதை எங்கியாவது கண்டோமா?! பாழாப் போன அரசு டாஸ்மாக்கை திறந்து என் தாலியை அறுத்துருச்சே நான் என்ன செய்வேன்?! தாலியோட போகுமா என்னையும் தான் வித்துப்புடுவான், குடிகாரன்னு தெரிஞ்சும் என்னை இங்க கட்டிக்குடுத்து என் குடியைக் கெடுத்துட்டாகளே?!” தெருவைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறாள் சுப்பு.

மாசக்கணக்கா கடை கண்ணி இல்லாம வேலைக்குப் போக முடியாம இருக்கிறதை வச்சு கஞ்சி குடிக்கிறோம்.இந்த டாஸ்மாக்கை மட்டும் ஏன் திறக்குறாங்க.எங்களை உசுரோட கொல்ல முடிவெடுத்துட்டாங்களே….பாவிகளா நீங்க நல்லா இருப்பீங்களா?! சும்மாவே காசை வம்புல குடிச்சி சீரழிப்பானுங்க. இப்ப வீட்ல எதையெல்லாம் விப்பானுங்களோ எங்களையும்  விப்பானுங்களோ?! இதைக் கேக்க ஆளில்லையா?!”

கோமதியும் சேர்ந்து அழுகிறாள், அழுது அழுது பிள்ளைகளும் சுப்புவும் கோமதியும் சாப்பிடாமலே படுத்துக்கிடக்க தள்ளாடிக்கிட்டே வந்த தவிடன் இவங்களை தாண்டி உள்ள போயி அடுப்படியில சட்டியை உருட்டுறான்.” வயித்தப் பசிக்குது சோறு போடுங்கடின்னு ஏக வசனத்துல அம்மாவையும் சேர்த்துக் கத்துறான்.

அழுது ஓஞ்சு படுத்துக்கிடக்குற சுப்புவும் கோமதியும் பதிலே பேசாம படுத்திருக்க….

வாயில நுழைய முடியாத கெட்ட வார்த்தையால் திட்டிக்கிட்டே வாசல்ல போய் விழுகிறான்.

காலையில எந்திரிக்கும் போதே காய்ச்சல் கொதிக்குது கட்டுன பாவத்துக்கும் பெத்த பாவத்துக்கும் அவனைத் தூக்கிப் படுக்க வச்சு சுடுகஞ்சியும் மாத்திரையும் குடுக்கிறாங்க சுப்புவும் கோமதியும். அன்னைக்கு சாயங்காலமே இருமலும் தும்மலும் விடாம தொடர மறுநாள் கொரோனா கணக்கெடுக்க வந்தவங்க சந்தேகப்பட்டு இவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறாங்க.

இரத்த மாதிரியை சோதிச்சதுல இவனுக்கு வந்திருக்கிறது கொரோனாதான்னு   உறுதியாகிருது.இதே அறிகுறிகளோட அங்க வந்த இன்னும் பத்துப் பேருக்கும் இதே கதி தான்.கடைசியா விசாரிச்சதுல நேத்து டாஸ்மாக்கை சரக்கு வாங்குன எல்லாருக்கும் வந்திருப்பது உறுதியாகுது.உடனே வந்து வீட்ல இருக்கிற பொம்பளைங்க   பிள்ளைங்களையும் அள்ளிக்கிட்டுப் போய் சோதனை பண்றாங்க. பாதிக்கு பாதி பேருக்கு கொரோனான்னு உறுதியாயிருச்சு..

கூழோ கஞ்சியோ குடிச்சாலும் உசுரோட இருந்தோம், இப்பிடி டாஸ்மாக்கை திறந்து மொத்தமா எங்க குப்பத்துக்கே கொள்ளி வச்சுட்டாங்களேன்னுபொம்பளைங்க வைக்கிற ஒப்பாரி அந்த ஊரையே உலுக்குது.

அடுத்தடுத்து ஒரே வாரத்துல ஐம்பது பேரு பெருசும் சிறிசுமா செத்துப் போறாங்க. இங்க இவ்வளவு பேரு பெத்ததுக்கு எது காரணம் கொரோனாவா?! குடியான்னு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் விவாதம் பண்ணிக்கிட்டிருக்காங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க கொரோனாவா?! குடியா?!

- பூமாதேவி

 

 

4.K2K-00042 

 விருப்பமான தலைப்பு கதை

மனைவி (இரண்டாம் தாய்)

மணி மொழியன் 8 வயதிருக்கும்போதே தன் தாயையும் தந்தையும் ஒரு விபத்தில் இழந்து விட்டான்.  அவர்களின் தூரத்து சொந்தமான முத்து சித்தப்பா வீட்டில் தான் தங்கி படித்ததான். சித்தப்பா சித்திக்கு அந்த நேரத்தில் குழந்தைகள் இல்லை, அதனால் அவர்கள் இருவரும் நல்ல பாசமாக இருந்தனர்.

ஓரிரு வருடங்களில் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனாலும் சித்தப்பா எப்போதும் போல இவனிடம் நல்ல பாசமாக தான் இருந்தார்.  ஆனால் அவரது சித்தி தனக்கு குழந்தை வந்து விட்டதால் அவனை ஓரம் கட்ட ஆரம்பித்து வித்திட்டார். எப்போதுமே அவனுக்கு பாரபட்சம் தான் தன் சித்தியிடம்,

மணி மொழியனோ அவன் தம்பி மற்றும் சித்தி சித்தப்பாவிடம் நல்ல பாசமாக இருப்பான்.  இவை எல்லாவற்றையும் கடந்து நல்ல முறையில் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான்.  அவனுக்கு மனதில் ஒருவித பயம் எப்போதும் சித்தியை நினைத்து கொண்டு இது போல் தன் மனைவி அமைந்து விட்டால் என்ன செய்வது என்று மனம் முடிக்க அவனுக்கு பயம் விருப்பம் இல்லை.

இப்படியிருக்கையில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது தனியார் நிறுவனம் ஒன்றில். அங்கே நறுமுகை என்ற பெண்ணும் அவன் சேர்த்த அதே நாளில் வேலைக்கு சேர்ந்தார்.  அவளுக்கு அப்பா கிடையாது அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தவள். 

மணி மொழியனின் அமைதியான குணம் கண்டதும் அவளுக்கு அவன் மீது காதல் ஏற்பட்டது. அதை தன் தோழி அகிலா மூலமாக தெரிவித்தாள் . ஆனால் மணி மொழியனுக்கோ தன் மனதில் உள்ள பயத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

ஆனால் நறுமுகையோ விட வில்லை அவனிடம் சென்று நேரடியாக பேசினாள், நான் உங்களைப் பற்றியம் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் நீங்கள் வளர்ந்தத விதம் எல்லாம் தெரிந்து கொண்ட பிறகுதான் எனக்கு உங்கள் மீது காதல் அதிகமாக வந்தது.

 அம்மா இல்லாத பிள்ளைக்குத்தான் அம்மாவின் அன்பு தேவைப்படும் அது புரியும்.  அதை நான் உங்களுக்கு தர தயாராக இருக்கிறேன் என சொல்லக் கேட்டதும் மணி மொழியனுக்கு தலை கால் புரியவில்லை நொடி தாமதிக்காமல் நறுமுகையை இறுகத் கட்டி தழுவிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான். அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவர்கள் திருமணம் இனிதாக நடைபெற்றது அவர்களும் நீடுழி வாழ்ந்தார்கள்.

நெறி: மனைவி என்பவள் கணவனுக்கு இரண்டாம் தாய், அதே போல கணவன் மனைவிக்கு முதல் குழந்தை என்று வாழ்ந்தால் இல்லம் என்பது இனிய இல்லறமாக இருக்கும். நாம் வாழும் போதே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

- கணேசன் சண்முகவேல்

 

 

5.K2K-00042

விருப்பமான தலைப்பு கதை

உழைத்து வாழ வேண்டும்

தானப்பபுரம் என்ற   ஊரில் அய்யாவு என்று ஒருவன் இருந்தான. அவனுக்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருந்தது, அதாவது அவன் எந்த விதமான விலங்குகளாக இருந்தாலும் அதனுடன் பேசுவான் அந்த விலங்குகளை கணநேரத்தில் அடிமையாகி விடுவான்.

அந்த சக்தியை வைத்து அவ்விலங்குகளை அடிமைப் படுத்தி அதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வயிற்றை நிரப்பி வந்தான.  ஒரு நாள் ஒரு யானையை பிடித்து வர காட்டுக்குச் சென்றான்.

போகும் வழியில் ஒரு குரங்கை பார்த்தான். அவனை கண்டு அஞ்சி நடுங்கி நின்ற அந்த குரங்கிடம் அவன் யானை எங்கே இருக்கிறது என்று கேட்டான், அதற்கு அப்பாடா நாம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்து கொண்டு, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் யானை நேராகச் சென்றால் ஒரு மாமரம் இருக்கும், பின் வலது புறம் திரும்பினால் அங்கே ஒரு புளியமரம் இருக்கும்.  அங்கே பார்த்தால் புலிகள் இருக்கும், அவைகளிடன் கேட்டால் அது சொல்லிவிடும் என்றது. அதை கேட்டு அவன் அவ்வழியே நடந்து சென்று அங்கே புலியையும் கண்டு பிடித்தான.

புலியும் இவனது சக்தி கண்டு பயந்து நடுங்கி நின்றது, அவன் அப்புலியிடம் யானை எங்கே என்று கேட்க நீங்கள் அந்த ஆற்றைக் கடந்து சென்றால்ஒரு சில நிமிடத்தில் யானை கூட்டத்தை காணலாம் என்றது.

அதன்படியே கடந்து சென்ற அவன் யானை கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தான்.  நன்கு வளர்ந்த யானை ஒன்றை கண்டு அதைத் தன்னுடன் வருமாறு அழைத்தான்.  அதற்கு அந்த யானையும், எஜமானரே நானும் உங்களுடன் வருகிறேன் ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்க அனுமதிக்க முடியுமா? என்றது. அதற்க்கு அவன் இந்த யானைக்கு என்ன அறிவு இருக்க போகிறது கேட்டு விட்டு போகட்டும் என அனுமதித்தான்.

பின் யானை அவனிடம் நாங்கள் ஐந்தறிவு உயிரினங்கள் நாங்களே இங்கே எங்களுக்கு தேவையானதை உழைத்து பெற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் பகுத்தறிய தெரிந்த நீங்கள் எங்களைப் பிடித்து சென்று எங்களுக்கு பிடிக்காத வேலை செய்யச் சொல்லி அதன் மூலம் உங்கள் வயிற்றை வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டது,

அதை கேட்டதும் அய்யாவுக்கு தூக்கி வரி போட்டது, ஒரு ஐந்தறிவு உயிருக்கு இருக்கும் புத்தி கூட தனக்கு இல்லை என நொந்து மனம் திருந்தினான் அய்யாவு. அந்த யானைக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்கு திரும்பி வந்தான். தன் குடும்பத்தினருடன் நடந்ததை சொல்லி ஒரு சின்ன வியாபாரம் தொடங்கி குடும்பத்தினருடன் நலமாக வாழ்ந்தான்.

நெறி: உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...

-கணேசன் சண்முகவேல்

 

 

6.K2K – 00043

சக மனிதா!

அங்கு மனிதர்கள் வாழ்ந்தனர்; மனிதர்கள் மட்டுமே. சிறு புழுவிற்கும் அங்கு இடம் இல்லை. காலால் நசுக்கினர்; விரட்டி அடித்தனர்; இன்னும் பல பலசாலிகள் பெரும் மூச்சைவிட்டு ஓட வைத்தனர். காரணம் அது மனிதர்கள் மட்டுமே வாழும் இடம். அது எப்போதும் அப்படி இருந்தாக வேண்டும் என்னும் கடமை, சுயநலம், சக மனித அக்கறை; வெறும் "மனித" அக்கறை. அதை சித்தாந்தமாகக் கருதி, அவர்கள் எப்போதும் அதை நினைத்து பெருமை கொண்டதுண்டு. சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ள எடுத்துரைப்பதுண்டு. மேலும் அதை உயர பிடித்து ஓடுவதுண்டு.

அப்படித்தான் அந்நாளும் விடிந்தது. சித்தாந்தமும் மாறவில்லை, அந்த இடமும் மாறவில்லை. அது மனிதன் வாழும் இடமாகவே இருந்தது. தொலைவில், ஒரு பச்சை நிற துண்டு தெரிந்தது. அது காற்றில் அசையவும், அருகில் வருவது உடையில்லா ஒரு சக மனிதன் எனவும், அவன் அழுவதும் மற்ற சக மனிதர்களுக்கு விளங்கியது. அவன் கையில் ஓர் கலப்பையும் (ஏர்) உள்ளது என்று, அவன் தொலைவில் உள்ள போது, யாரும் அறியவில்லை. அதை கண்டதும் பிற மனிதர்கள் விரைந்தனர். சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பிற மனிதர்களிடம் அவனை காப்பாற்ற சண்டை பிடித்தனர். அங்கு ஒரு போர் மூண்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்த அளவுக்கு பெரும் சண்டை.

தலைவன் ஒருவன் வந்தான். அவனுக்கு ஆடை வழங்க பணம் தேவை என்றும் அதை விரைவில் தருவதாகவும் கூறி சித்தாந்தத்தை உரக்க மொழிந்தான். காவி நிற நூலை வேறு உலகத்தில் இருந்து வாங்க எல்லோர் முன்னும், அவனோடு துணை நின்ற, சக மனிதன் ஒருவனை செல்ல ஆணையிட்டான். சிலர் அதை வழி மொழிய சிலர் அதை எதிர்க்க என்று அந்த காலை பொழுது நீண்டது. ஆடையில்லா அவனோ, அக்னி கதிர்களுக்கும் சக மனிதர்களுக்கும் நடுவில் வாய்அசையாது நின்று கொண்டிருந்தான். கலப்பையின் எடை கூடியதா அல்லது அவனின் பலம் குறைந்ததா என்று தெரியவில்லை; அவன் அதை தரையில் வைத்து யோசிக்க தொடங்கினான்; அவனுக்கு பின்னால் வரப்போகும் 'சக மனிதர்களை' பற்றி. ஒருவனுக்கு செருப்பில்லை (அவனை அணிய வேண்டாம் என்று கட்டளை இட்டதும் அதே சக மனிதன் தான்), மற்றொருவனின் மேனி முழுவதும் சக மனிதனின் கழிவு (அதை எடுக்க கட்டளை இட்டதும் அதே சக மனிதன் தான்). இவர்கள் பொறுமையாக வரட்டும் என்று வேண்டிக் கொண்டான்.

வேறு உலகத்தில் இருந்து நூல் வரும் என்று எதிர்பார்த்த மனிதர்கள், ஆடையற்றவன் யோசிக்கும் வேறு மனிதர்களை பற்றி யோசிக்கவும் இல்லை, அப்படி இருவர் இருப்பதும் இவர்களில் பலருக்கு தெரியாது. ஆனால், சக மனித சித்தாந்தந்தம் ஓங்கி வளர அவர்களின் குரல் எப்போதும் ஒலிக்கும். காரணம் இது மனிதர்கள் வாழும் உலகம் இங்கு சிறு புழுவிற்கும் கூட இடம் இல்லை.

"தனி மனிதனுக்கு இடம் இல்லை என்றால் நாங்கள் மரத்தினையும் அழிப்போம்!"

பின் குறிப்பு: இந்த உலகத்தில் "அவன்" மட்டுமல்ல "அவளும்" இருக்கிறாள். ஆனால் சக மனிதன் அவளை வீட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளான். மீறினால் தண்டிக்கப் படுவாள்!

 

விஜய குமார்

 

 

7.K2K00048 ...

 ...... என்னுடைய விருப்பம் ......

          என் வாழ்க்கை ஆரம்பித்த இடத்தில் இருந்து ஊன்று உழன்று விடா முயற்சியுடன் என் முதல் அடியிணை பூமியில் எடுத்து வைத்தேன், என்னை தொடர்ந்து வந்து நான் கீழ் விழாமல் தாங்கி பிடிமானம் கொடுத்து வந்தது எனது அன்பிற்குரிய உறவுகள், அந்த பிடிமானம் விட்டு தூர விலகிச் சென்று வெகுதொலைவில் உள்ள நிரந்தர பிடிமான நிலையினை படிக்க செல்லும் போது, பலரும் பிடிமானம் தருவது போல் நடித்து ஏமாற்றி என்னை கீழ் தள்ளி மிதித்து புதைக்க முயன்றனர்,

         அப்போதும் உலகில் நம்மிடம் எதும் இல்லாத நிலையில் கடவுள் துணை நிற்பது போல, எனக்கு சில வாய்ப்புகள் தேடி வந்தது..,

         அந்த வாய்ப்புகள் மிகவும் சிறியது, இருப்பினும், பாதி மண்ணில் புதைந்த எனக்கு ஊன்று கொல் போல் நின்றது அத்தகைய வாய்ப்புகள் மூலம் நான் சிறுக சிறுக மேல் வரும் கணமும் என் வெற்றிக்கான அறிகுறி என்று தன் நம்பிக்கை வளர்த்து, முயற்சி செய்து,

          மீண்டும் மீண்டும் தோர்த்து, மீண்டும் மீண்டும் முயற்சித்தேன், என் முயற்சிக்கு ஏற்ற வாரு வாய்ப்புகளும் சிறுக சிறுக பெரியதாக வந்தது, என்னை முழுவதுமாய் மீட்டெடுத்து, சாதனை படைக்க காரணமாய் திகழ்ந்தது., இத்தகைய ஒரு வழியின் பக்க பலமாகவும், ஊன்று கொலாகவும் பயன்பட்டு என்னையும் என் திறனையும் வளர்த்து, உலகிற்கு ஒளி வகுத்து காட்ட கூடிய இந்த சிறு கதை முயற்சி.,

           எனக்கு மிக பெரிய வாய்ப்பு, கடவுள் அளித்த வெற்றி என்று கருதுகின்றேன்...

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

8.K2K-00053

கூந்தலும் மீசையும்

"எதிரே வரும் காற்று அவள் நெற்றியோர கூந்தல் கலைத்துச் சென்றது... மிக வேகமாக ஸ்கூட்டியை ஓட்டினாள்... மனதில் ஒரே படபடப்பு...

"நவின்...உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்..." மனதில் எண்ணியவாறே காற்றோடு பயணித்த தன் கூந்தலை சரி செய்து கொண்டே இன்னும் வேகமாக டிரைவ் பண்ணினாள் துளசி"

வீட்டு வாசல் கிரீச்சென நீண்ட ஒலியில் ஸ்கூட்டி நின்றது....

பரபரப்பாய் உள்ளே நுழைந்தாள்

விழுங்கிய அத்தனை காற்றையும் மூச்சாய் வெளியிட்டாள்...

சில துளி நீரை கண்ணில் தேக்கியபடியே நவின் நவின் என அழைத்தபடியே தேடலானாள் ரூம் ரூமாக பரபரப்பாக...

துளசியின் கொலுசொலி அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல.... கண்ணை மூடிக் கொண்டே...

"வாங்க மைடியர் பொண்டாட்டி கால் பண்ணின உடனே வந்தாச்சு" என செல்லமாய் புன்னகையுடன் அழைத்தான் நவின்"

'டேய் உனக்கு என்ன விளையாட்டா இருக்கா? நான் உன்கிட்ட ரசிச்சு ரசிச்சு பார்த்த அப்யரன்ஸ் போயிரும் டா... நா அலோ பண்ண மாட்டேன்

நா இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன் என கத்தினாள்"

"ஏன் டி இவ்வளவு சத்தம் போட்டு கத்துற? ஹார்ட் பீட் இவ்வளவு வேகம்? என அவள் நெஞ்சோரம் தலை சாய்த்தான்...

லேசாக தள்ளினாள்...

துளசி ஒன்னுமே இல்லாத விஷயம் டி.... இதுக்காக ஆபிஸ்லருந்து பாதில வந்தியா? என மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டே ஷேவிங் ரேசரை கையில் எடுத்தான்..."

"நோ.... உன்ன நா விட மாட்டேன்...

எனக்கு என் நவின் மீசையோட தான் வேணும் என கண்ணிர் துளியை தன் கூந்தலால் ஒதுக்கினாள்..

லேசாக சிணுங்கினாள்..."

"ஏய்.... இது ஒரு சூட்டிங்குக்கு...

ரொம்ப நாள் கழிச்சு கெடச்ச ஆபர்

ஒரு காபி விளம்பரத்துக்கு டி..."

காபிக்கும் மீசைக்கும் என்ன டா சம்பந்தம்? அந்த டைரக்டர் லூசா டா?

துளசி கோப படுத்தாத நகறு... டோன்ட் பி ஸ்டுபிட் என தள்ளினான் சேவிங் ரேசரை எடுத்துக் கொண்டே...

ஏன் டா போன மாசம் நா ஹேர் கட் பண்ணிக்க கேட்ட போது பெருசா ரியாக்ஷன் விட்ட...

எனக்கு லாங் ஹேர் தான் பிடிக்கும் கட் பண்ணாதனு ஆர்டர் போட்ட...

உனக்காக நா கேக்கலியா....

நீ மீசைய மொத்தமா ஷேவ் பண்ண விட மாட்டேன்....

பொம்பள வேசமாடா போட போற..

என கூறிக் கொண்டே ஷேவிங் ரேசரை ஜன்னல் வழியே தூக்கி எறிந்தாள்...

"துளசி....இட்ஸ் டூ மச் டி" என கோப பார்வை பார்த்தான்...

பிளீஸ் டா...எனக்காக... மை ஆசை மீசை டா நீ... என செல்லமாய் தோள் சாய்ந்தாள்...

புன்னகையாய் தலை அசைத்தான் நவின்...

 நீதி: இது மொத்தமும் மனசு பீலிங்ஸ்ங்க...வெளிலயிருந்து பார்த்தா யாருக்கும் வெலங்காதுங்க...அதனால இதுக்குள்ள நீதினு சொல்லிட்டு நாம மூக்க நுழைக்காம இருப்போமே....

- பூங்கொடி-

 

 

9.K2K-00042

புத்திசாலி பெற்றோர்

அழகம்மாள்புரம் என்ற ஊரில் மதுமதி மற்றும் ராஜனுக்கு இரண்டு குழந்தைகள் அவர்கள் பெயர் பிந்து & சிந்து இருவரும் இரட்டையர்கள் வயது 6. அவர்கள் எப்போதுமே தனக்கு பிடித்தத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள். ஐஸ் க்ரீமில் கூட. அம்மா மதுமதிக்கு மிகுந்த வருத்தம். வளரும் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்களே என்ன செய்வது என்று தன் கணவர் ராஜனிடம் கேட்க அவர் ஒரு ஐடியா சொன்னார்.

அதன் படி இருவரையும் தாங்கள் இருக்கும் வீட்டின் அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் கடைக்கு அனுப்பி வைத்தனர். பிந்துவுக்கு எப்போதும் சாக்லேட் ஐஸ் கிரீம் தான் பிடிக்கும், சிந்துவுக்கு மேங்கோ ஐஸ் கிரீம் தான் பிடிக்கும்.

அவர்கள் அங்கே சென்று கடையில் இருக்கும் முருகன் மாமாவிடம் ஐஸ் கிரீம் கேட்டனர். ஆனால் ஏற்க்கனவே மதுமதியும், ராஜனும் கடை உரிமையாளர் முருகனிடம் சொல்லி வைத்திருந்தனர். தங்கள் குழந்தைகள் வரும் போது நீங்கள் வேறு சுவை கொண்ட ஐஸ் கிரீம் கொடுங்கள் என்று.

அதன் படி முருகனும், செல்ல குட்டிங்களா நம்ம கடையில இப்போ ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீம் தான் இருக்கு அதுவுமே ஒன்னு தான் இருக்கு. நீங்க சாப்பிட்டு பார்த்துட்டு நல்ல இருந்த பணம் கொடுங்க என்று சொன்னார். ஆனால் அவர்கள் இருவருக்கும் பலத்த யோசனை என்னடா இது இப்படி ஆகி விட்டதே என்று. ஆனாலும் ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தில் மற்றும் நல்ல இருந்த தானே பணம் கொடுக்க வேண்டும். என்று நினைத்து கொண்டு பிந்துவும் சிந்துவும் வாங்கி சாப்பிட்டு பார்த்தனர்.

அவர்கள் இருவரும் அதன் சுவையில் மெய் மறந்து மனம் மகிழ்ந்து போயினார்கள். முருகன் மாமாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்ததை சொல்லி, அம்மா இனிமேல் நீங்க கொடுத்ததை சாப்பிடுகிறோம் என்று சொல்லி தாயில் மடியில் படுத்து கொண்டனர்.

நல்ல விஷயத்தை தங்கள் குழந்தைகளுக்கு புரிய வைத்ததற்கு அப்பா அம்மா இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

நெறி: புதிய பாதை - புதிய உறவு - புதிய சுவை - எப்போதுமே நமக்கு தேவை, இதை புரிந்து கொண்டால் வாழ்கை என்பதை பெரும் சுவையாக அமையும்.

- கணேசன் சண்முகவேல்

 

 

10.K2K00063

தலைப்பு தாராவின் ஒரு நாள் ஒரு கனவு

தாரா கண்விழித்து தன் கைபேசியில் நேரம் பார்த்தாள் காலை 4.30 மணியையும் அன்றைய தேதி 1.3. 2030 என்று காட்டியது. தன் மேல் கால் போட்டு படுத்து இருக்கும் ஆதர்ஷ், ஆதிரா இருவரும் மகன் வழி பேரன் பேத்தி மற்றொருபுறம் மணிஷ், அனுஷா மகள் வழி பேரன் பேத்திகளின் கைகால்களை அவர்களின் தூக்கம் கலைக்காமல் எடுத்து நகர்த்தி போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். தாரா தன் கைபேசியில் கவலை ஏதும் இல்லா குழுவிற்கு (Hakkuna matata) காலை வணக்கம் செய்தி அனுப்பினாள், அப்படியே அற்புதமான மனிதர்கள் வலைதளத்தில் (Amazing human being website) அவளுக்கான செயல்கள் என்னென்னவென்று பார்த்தாள். அன்றைய நிகழ்வுகள்(Daily events) பகுதியில் தன் பேரன் பேத்திகளுக்கு தன் பள்ளிப் பிள்ளைகளுக்கான நிகழ்வுகளை தேடி குறித்துக் கொண்டாள். நாம் பேசுவோம் இணைந்திருப்போம்(Let's talk, let's connect) குழுவை திறந்து அதில் இன்றைய பகுதியில் எதைப்பற்றி யார் பேசுகிறார் என்பதை குறித்துக்கொண்டு ,அற்புதமான மனிதர்கள் வானொலியை ஒலிக்க விட்டாள்(Amazing human being radio) .அதன்பின் தன் வகுப்பு பிள்ளைகளுக்கான பாடத்திட்டங்களை சரி பார்த்தாள் .அதற்குள் மணி ஐந்தாகி விட்டது உடனே மாடிக்கு சென்று நடைபயிற்சி மேற்கொண்டாள் ஆறு மணிக்கு புறாக்களுக்கு உணவு வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள் .அதற்குள் மகன் ,மருமகளும், மகள் ,மாப்பிள்ளையும் அவரவர்களின் அறைகளிலிருந்து வெளியே வந்தனர். பிள்ளைகள் மட்டும் எப்போதும் தாராவின் அறையிலேயே இருப்பார்கள் .அவர்களும் எழுந்து வந்தனர் .அப்போது அங்கு உணவு சமைக்கும் அம்மாவும் வந்தார் உடனே தாரா தன் பேரக் குழந்தைகளிடம் என்னென்ன சிற்றுண்டி வேண்டுமென கேட்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவை கேட்டனர் .அவற்றை ஒட்டிய தகவல்களை அம்மாவிடம் கூறிவிட்டு தானும் குளித்து வந்து உதவுவதாகக் கூறி சென்றாள் தாரா .தன் அறைக்குச் சென்ற தாரா கைப்பேசியில் சியாம் ,அஜிஸ், பவித்ரன் , தீபா, பவானி ,பிரசன்னா ,கமலேஷ் ,பண்டலேறு சதீஷ், சச்சு,- உதவி மகிழ் திவாகர், குட்டிக்கதை பிரியா மற்றும் தன் மகள் பாடிய பாடல்களை கேட்டுக்கொண்டே தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு அவர்களின் பாடல்களுக்கான பாராட்டுகளை தெரிவித்துவிட்டு கீழே வந்தாள் .தன் பேரன் பேத்திகளுக்கான சிற்றுண்டிகளை தயாரிக்கலானாள். அவரவர்கள் தங்களின் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு சிற்றுண்டியை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின் அவரவர்கள் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர் .பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர் .தாராவும் மதியத்திற்கு வேண்டிய உணவு தயாரிக்கச் சொல்லி அம்மாவிடம் கூறிவிட்டு அவளும் அவள் பள்ளிக்கு சென்றாள் . அவள்பள்ளிஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. மாலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து நொறுக்குத் தீனியை தின்று தேனீர் பருகினர் அப்போது தாராவின் மகள் ராயல் என்ஃபீல்டு வண்டியில் நீண்ட தூர பயணம் சென்று வந்த கதையை கூறினாள். தாராவின் மகன் தன் சொந்த மகிழுந்து வண்டியில் தன் குடும்பத்துடன் பயணம் சென்று வந்த கதையைக் கூறினான் பேரக்குழந்தைகள் அப்பணத்தை அவர்கள் எவ்வாறு ரசித்தார்கள் ,மகிழ்ந்தார்கள் என்பதை தாராவிடம் கூறினார்கள் அப்போது தன்  குடும்பத்துடன் கப்பலில் உலகப் பயணம் மேற்கொண்டிருந்த பண்டலேறு சதீஷிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது அப்பயணத்தை பற்றி சதீஷிடம் பேசிவிட்டு அவ்வாரம் தன் வீட்டு மாடியில் நடக்கவிருக்கும் மொட்டைமாடி சந்திப்பிற்கு திட்டமிடும்போது தன் குழு உறுப்பினர்களான மீட் பார் தாய் அஜீஸ், ரேடியோ ஜாக்கி பிரசன்னா,கண் மருத்துவர் பவானி, கதை ஆசிரியர் பிரியா, உதவி மகிழ் திவாகர்,புதுமைக் கல்வி புகுத்திய ஷியாம், கவிஞர் கமலேஷ்,சேவகி தீபா, அற்புதமனிதர் சச்சு,சுப்ரதா,பத்மா, மஹாலக்ஷ்மி, கார்த்திகா, ராதிகா, பவித்ரன், ஆஷிஷ், ஹரீஸ், தன் உயிர் தோழியும், தன் குடும்ப நலன் விரும்பியுமான நந்தினியையும் மற்றும் பல நண்பர்களுடன் திட்டமிட்டுவிட்டு அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அவரவர் நலன்களை விசாரித்து வைத்தாள் தாரா. மாடியை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை மகளுடன் சேர்ந்து திட்டமிட்டு விட்டு இரவு உணவிற்கான திட்டமிடல்களை அம்மாவிடம் கூறிவிட்டு அவளுக்கு

மறுநாள்பள்ளிக்கு தேவையானவற்றை திட்டமிடலானாள். தீபாவின் சேவைக்கு பணம் அனுப்புமாறு மகளிடம் நீனைவூட்டினாள். இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுவிட்டு அவரவர்கள் தங்களின் அறைக்கு செல்ல தாராவும் தன் பேரக் குழந்தைகளுடன் பாட்டியாகி தன் அறைக்குச் சென்று கதை கூறிக்கொண்டே உறங்கலானாள்.

- ANURADHA

 

 

 

11.K2K-00064

"தோழிகள்"

மாதவியும், மாலாவும் மிக நெருங்கிய தோழிகள்! எதிரெதிர் வீடும் கூட.

மாதவி, மாலா வீட்டுக்கு வந்தாள். இருவரும் வெகு நேரம் அரட்டை அடித்துக் பேசிக்கொண்டிருந்தனர்.

பின் மாதவி மாலாவிடம், "சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு ஈவ்னிங் என் நாத்தனார் பொன்னுக்கு பர்த்டே பங்க்ஷன் இருக்கு, அந்த பங்ஷனுக்கு போகனும், நான் எந்த சாரி கட்டிட்டு போனா நல்லா இருக்கும்னு கொஞ்சம் சொல்லேன் ஒரே குழப்பமா இருக்கு" என்றாள்.

அதற்கு மாலா, "...இன்னைக்கு சண்டேல்ல, நானும் மறந்துட்டேன் இன்னைக்கு ஒரு மேரேஜ் பங்க்ஷன் இருக்கு நானும் போகணும், ம்...நீ லாஸ்ட் மன்த் வாங்கினில்ல ஒரு ரோஸ் கலர் சாரி அதையே கட்டிக்க சூப்பரா இருக்கும்", என்றாள் மாலா.

"ஆமால்ல, நானும் மறந்துட்டேன், அப்ப அந்த சேரியவே நான் கட்டிக்கிறேன, ஓகே மாலா அப்ப நான் கிளம்புறேன் டைம் ஆயிடுச்சு நைட் பார்க்கலாம்" என்று அவள் சொல்ல, அதற்கு மாலாவும் "சரி நானும் கிளம்புறேன் டைம் ஆச்சு" என்றாள்.

மாதவி சேலைகட்டி புறப்பட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டே..."என்னங்க என்னங்க உங்களத்தான் கொஞ்சம் வாங்களேன்" என்று கணவனை கூப்பிட்டாள்.

"என்ன மாதவி கிளம்பிட்ட போல, கேப் புக் பண்ணவா, போகலாமா" என்று கணவன் கேட்டான்

"அதெல்லாம் நான் புக் பண்ணிட்டேன், கதவை திறந்து கொஞ்சம் வெளியே பாருங்களேன், மாலா வீட்டு கதவு சாத்தியிருக்கா திறந்திருக்கான்னு, நான் வெளியில் வரும்போது அவ பொசுக்குன்னு வந்துட போறா, அவ முகத்துல முழிச்சுட்டு போனா ஒன்னும் விளங்க மாட்டேங்குது என்று மாதவி சொல்ல", அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு வெளியே பார்க்கச் சென்றான் அவன்.

மாலா வீட்டில், "என்ன மாலா கிளம்பிட்டியா போகலாமா" என்றான் மாலாவின் கணவன்.

அதற்கு மாலா தன் கணவனிடம், "அதுலாம் இருக்கட்டும் முதல்ல கதவைத் திறந்து எதிர்ல மாதவி வீட்டு கதவு திறந்திருக்கா சாத்தி இருக்கான்னு பாருங்க, அவள பார்த்திடாம கிளம்பணும், அவ முகத்துல முழிச்சுட்டு போனா போரகாரியம் ஒன்னும் உருப்படாது" என்று சொல்ல... இதை வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த மாதவியின் கணவன் திக்கித்து போய் நின்றான்.

*************

-மகிழை. சிவகார்த்தி

 

 

12.K2K- 00067

!!!!!!!!! நாமொன்று நினைக்க....!!!!!!!!!

______________.         போக்குவரத்துத் துறை அமைச்சர் எதிரே.தூரத்து உறவினர் கூட.பக்கத்து இருக்கையில் தாய் மாமன் தோழர் தியாகு.போக்குவரத்துத் துறை தொழிலாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்.எனவே கொஞ்சம் ஒடுங்கியே உட்கார்ந்து இருந்தான் சிவா.

          அமைச்சர் தான் ஆரம்பித்தார்." சொல்லுங்க தம்பி, நீங்க பெரிய சாதனை தான் படைச்சிருக் கீங்க, பத்து வருஷமா நானும் அமைச்சர், உங்க மாமாவும் தொழிற் சங்கத் தலைவர், எந்தப் பரிந்துரைக்கும் என்கிட்ட அவர் வந்ததே இல்லை, இப்ப வந்திருக்காருன்னா உங்க மேல அவர் எவ்வளவு பாசம் வைச்சிருக்காருண்ணு தெரியுது...

     அப்புறம் உங்களுக்கு கண்டக்டர் போஸ்டிங் SETC வேணுமா இல்ல TNGSTC வேணுமா? உங்க சாய்ஸ் என்ன?" என்றார்.

   உடனே யோசிக்காமல்TNGSTC என்றேன்.

         " சரிங்க தம்பி, அடுத்த வாரம் ஆணை வரும் வாங்க" என்றார் அமைச்சர். ஒருவருக்கு ஒருவர் வணக்கங் கள் முடிய வெளியே வந்தோம்.

         வெளியே வந்ததும் மாமா கேட்டார்," ஏன் மாப்ள, SETC கேப்பேன்னு பார்த்தேன், ஏன் அதைத் தேர்வு செய்யல?"

    " மாமா, கேட்டா சிரிக்கக் கூடாது, SETC வலது புறம் ஓட்டுநர் இருக்கை, இடது புறம் நடத்துநர் இருக்கை, எதிர்பாராத விபத்து சூழலில் ஓட்டுநர் தான் தப்பிக்க இடது பக்கம் தானே வண்டியை அணைப்பார், நடத்துநர் உயிருக்கு அதிக ஆபத்து. அதனால் தான் " என்றேன்.

       பெருங்குரலெடுத்து சிரித்த மாமா," மாப்ளே, உனக்கு முன் ஜாக்கிரதை ரொம்ப அதிகம் டா" என்று சொல்லிச் சிரித்தார். அமைச்சர் சொன்னது போலவே ஒரு வாரத்தில் ஆணை வந்தது, பணியில் சேர்ந்து ஓடி கொண்டு இருந்தான் சிவா, ஒரு நாள் சிவாவைச் சந்தித்த நண்பன் ஒருவன்," என்னடா அமைச்சர், தொழிற்சங்கத் தலைவர் என்று இரண்டு பேரைப் பையில் வைத்திருக்கும நீ SETC வேலை வாங்கி இருக்கலாமே. மன்னையில் பயணிகள் ஏற்றினால் சென்னை, இடையில் வேலையே இல்ல, சும்மா சல்லுண்ணு போய் கிட்டே இருக்கலாம் இல்ல.

   இது என்ன லோக்கல் கட்ட வண்டி, ஸ்டாப்புக்கு ஸ்டாப் நிறுத்தி ஏத்தி இறக்கி ...பெரும் சல்லையில்லே" என்றான். மாமாவிடம் சொன்ன காரணத்தை அவனிடமும் சொன்னான் சிவா.

             அதைக் கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்த அவன்," ஏண்டா, லோக்கல் வண்டில நடத்துநர் இருக்கை கடசில இருக்கே, பின்னாடி வருற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டா என்னடா பண்றது?" என்று கேட்டுக் சிரித்தான்.

       அன்றிலிருந்து பின்னால் இருக்கும் நடத்துநர் இருக்கையிலும      உட்காருவதில்லை சிவா.

               பல ஆண்டுகளுக்குப் பின் சிவாவின் நண்பன் மூர்த்தி சென்னையிலிருந்து ஊருக்குப் போக சிவாவின் பேருந்தில் வந்து ஏறினான். நடுப் பகுதியில் ஒர் இரட்டையர் இருக்கையில் நண்பனை உட்கார்த்தி வைத்த சிவா பக்கத்து இருக்கையில் பையை வைத்து இருக்கையை ரிசர்வ் செய்யச் சொன்னான்.

     " ரொம்ப நாளாச்சு நாம சந்திசசு...இருடா சீட்டெல்லாம் போட்டுட்டு கணக்கு முடிச்சுட்டு வரேன்" என்று போனான் சிவா.

     வேலை முடித்து வந்த சிவா காற்று வேண்டி ஜன்னல் பக்க சீட்டில் அமர்ந்தான்.

      நண்பர்கள்சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு வந்த போது ஒரு நான்கு முனைச் சந்திப்பை வண்டி கடக்கும் சமயத்தில தடால் என்று ஒரு பெருத்த மோதல் சத்தம். வண்டி குலுங்கி நின்றது.இவர்களது சலைக்குச் செங்குத்தான சாலையில் படு வேகமாக வந்த மணல் லாரி ஒன்று  நடத துனர் சிவா அமர்ந்திரntha ஜன்னல் சீட்டுக்கு நேரே மோதி நின்றிருந்தது. பேருந்தில் நல்ல வேலை யாருக்கும் அடியில்லை.

         கண்டக்டர் சிவா அவன் நண்பன் மீது சாய்ந்த படி இருந்தான், அவன் தலை தொங்கி இருந்தது.

-அன்பழகன்.

 

 

13.K2K 00068

ஒரு ஊரில் தேவி என்ற குழந்தை இருந்தது. அந்த குழந்தையிடம் உனக்கு ஒரு சாக்லேட் வேனுமா 2 சாக்லேட் வேனுமா என்று கேட்டால் எனக்கு 2 சாக்லேட் தான் வேணும் என அடம்பிடிக்கும்

அந்த தேவி என்ற குழந்தையிடம் உனக்கு ஒரு நாள் சுடிதார் வேணுமா மிடி வேணுமா என்று கேட்டால் 2 ம் வேணும் என்று சொல்லும்.

அதே நேரத்தில் அதே சமயம் ராஜ் என்ற பையனிடம் உனக்கு ஜீன்ஸ் பேண்ட் வேணுமா டவுசர் சட்டை வேணுமா என்று கேட்டால் ஜீன்ஸ் பேண்ட் வேணும் என்று ஒன்றை மட்டும் கூறுவான்.

தேவி வளர்ந்து விடவே பெற்றோர்கள் உனக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணுமா என்ஜினியர் மாப்பிள்ளை வேணுமா என்று கேட்டால் உங்கள் விருப்பம் நீங்கள் பார்த்து என்ன சொன்னாலும் சரி என்பாள்.

இதை ராஜ் வளர்ந்தவுடன் கேட்டுப் பார்த்தால் உனக்கு டீச்சர் பொன்னு வேணுமா என்ஜீனியர் பொன்னு வேணுமா என்று கேட்டால் என்ன கூறி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சில இடங்களில் நாமே தீர்க்கமான முடிவு எடுப்போம்.

சில இடங்களில் நாம் அதை தட்டி விட்டு நீங்களே சொல்லுங்கள் என பழியை போடுகிறோம்.

கொரோனா கதைகள் முடிவு இன்று தங்களின் விருப்பம்.

எனவே ராஜ் மற்றும் தேவியை சிந்தித்து தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவு இக்கதைக்கு கொடுத்துவிட்டு உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

-ஜோ. ஜெயராஜ்

 

 

14.K2K-00078

உடன்பிறப்பு

#########################

அன்று அதிகமான வேலைப்பளு என்பதால், வீட்டுக்கு போக முடியவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பி ராதிகா வீட்டிலே தங்கிவிட்டேன்.

ராதிகாவுக்கு தந்தை இல்லை. தாயும் தம்பியும் மட்டும் தான். சிறுவயதிலே குடும்ப பொறுப்புக்களை தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டாள். 10 வருடமாக நானும் அவளும் ஒன்றாக வேலை செய்கிறோம். இத்தனை காலமாகியும் தனக்கென ஒரு வாழ்க்கையை அவள் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. தாயின் உடல் நலனுக்காகவும் தம்பியின் படிப்புக்காகவும் அவள் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தாள்.

அன்று நானும் ராதிகாவும் 12மணியளவில், வேலை முடிந்து ஒன்றாக வீட்டுக்கு வந்தோம்.

"அம்மா.... அம்மா.....

கதவ தெறங்க"

"ம்ம்ம்ம்....

வாறே மா"

"உள்ள வாங்க மா"

"அம்மா தம்பி தூங்கிட்டானா?"

"இப்பத்தாமா..."

"சரிமா" என்றவள்.

என்னையும் அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள். தன் மகள் போல என்னையும் கவனித்துக் கொள்ளும் ராதிகாவின் அம்மாவை பார்க்கும் போது, 3 வருடங்களுக்கு முன்பு நான் இழந்த என் தாய் ஞாபகம் எனக்கு வரும்.

ராதிகாவின் தம்பி வருண். நன்றாக படிப்பான். யாரிடமும் அதிகம் பேசமாட்டான். கல்லூரிக்கு செல்லுதல், நண்பர்களுடன் வெளியில் செல்லுதல் என இருப்பான்.

இரண்டு மாதங்களாக அவனது செயற்பாடுகளில் சிறு மாற்றம் தென்பவதாக ராதி கூறினாள். நேரமில்லாமல் அதனை கவனத்தில் ராதிகா கொள்ளவில்லை. சில நாட்களாக தொலைப்பேசியும் கையுமாக இருக்க ஆரம்பித்தான்.

அன்றிரவு, நானும் அவளும் உணவு உண்டுவிட்டு, அவனது அறைக்கு சென்றோம். வருண் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது தொலைப்பேசி மேசையின் மீது இருந்தது.. எதிர்ப்பாராத விதமாக அதனை எடுத்தவள். நேரம் போவதற்காக அதிலுள்ள புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வருண் பக்கத்தில் நெருங்கிய நிலையில் ஒரு பெண்ணின் புகைப்படம் கண்ணில் தென்ப்பட்டது. வருணின் அனுமதியின்றி, புகைப்படம் முதல் குறுந்தகவல் வரை ராதிகா பார்த்தாள். அதிலொரு குறுந்தகவல் அவள் கண்ணில் தென்ப்பட்டது.

" அக்கா....

ஒத்துக்கலனா? என்னடா பன்றது."

"அவ மாரியே என்னவு இப்டியே, இருக்க சொல்லுறியா. அவனால வாழ்க்கைல ஒரு முடிவு இல்லம இருக்கே", என இருந்தது. ராதிகா என் முன்னே இடி தலையில் விழுந்தது போல விழுந்தாள். நான் தொலைப்பேசியை அவனது கட்டிலில் வைத்துவிட்டு, ராதிகாவை அவள் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

உருகி உருகி அழுதாள். அவனுக்காக தானே என் வாழ்க்கையையே.! அர்ப்பணித்தேன். எனக்கு வந்த வரன்களை எல்லாம் வேண்டாம் என தட்டிக்கழித்தேன். நான் திருமணம் முடித்து சென்றுவிட்டாள். இருவரின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துத் தானே.. 36வயதாகியும் திருமணம் முடிக்காமல் உள்ளேன். என் மீது துளியளவும் அன்பில்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன் என்று விம்மி விம்மி அழுதாள்.

ஆனால் வருண் மீது துளியளவும் அவளுக்கு கோபம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. என்னையும் என் அன்பினையும் அவன் புரிந்துக் கொள்ளவில்லை என புலம்பித் தள்ளினாள்.

இரவெல்லாம் உறக்கமின்றி, வாய் உலறிக் கொண்டே இருந்தாள். ஒருநாள் தேனீர் இடைவேளையின் போது கூறினாள். அவளது அப்பா பணத்தாசையில் இன்னொரு பெண்னை மறுமணம் செய்துக் கொண்டு, மூவரையும் நடுத் தெருவில் விட்டுச் சென்றதாக, அன்றிலிருந்து அல்லும் பகலும் பாராது மாடாக உழைக்க ஆரம்பித்தவள் இன்று வரை ஓயவில்லை.

அடுத்தநாள் காலை எழுந்தவள். வழமைப் போல வருணின் அறைக்கு சென்று, 300 ரூபா பணத்தினை பையில் வைத்துவிட்டு, கண் கலங்கியவாறு அறையை விட்டு வெளியே வந்தாள்.  நான் அவளிடம் ஒன்றுமே கேட்கவில்லை... அவள் என்னை அழைத்தாள். என் வாழ்க்கைதான் மலராமல் போய்விட்டது. வருணின் வாழ்க்கையிலாவது வசந்தம் வீச வேண்டும். இன்று மாலை மலர் வீட்டிற்கு சென்று நடந்ததை எடுத்துக்கூறி, திருமணத்தை நிச்சயம் செய்வோம். அவன் வேலைக்கு சென்றவுடன் திருமணம் செய்து வைப்போம் என்றாள்.

3மணியிருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த என்னையும் அழைத்துக் கொண்டு, அவளது வீட்டிற்கு சென்றாள்.

வருணின் காதலை பெற்றோர்களுக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து பக்குவமாக எடுத்துக் கூறினாள். தந்தையும் இல்லை. ராதிகாவும் திருமணத்தில் ஈடுபடாது இருப்பதை அறிந்த மலரது பெற்றோர்கள் ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ராதிகா கூறிய ஒரு பொய்யில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைப்போம் என கூறினார்கள்.

ராதிகா கூறினாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும்., வெளி நாட்டில் பணிப்புரிவதாகவும் இரண்டு வருடத்தில் வருவார் என்றும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினாள்.

காலம் அப்படியே ஓடிவிட்டது. நடந்தவற்றை பற்றி தெரியாதது போலவே ராதிகா இருந்தாள். வருணும் அக்காவிடம் எதுமே காட்டிக் கொள்ளவில்லை. வருணின் எதிர்கால வாழ்க்கை தொடர்பான கலந்துரையாடல்களை அம்மாவிடமும் என்னிடமும் கூறுவாள். வருணுக்கு நல்ல வேலையொன்று கிடைத்தது. ராதிகா குடும்ப பொறுப்புக்களை விட்டு விலகினாள். வருணின் வாழ்க்கைக்கு தடையாக இருக்க கூடாது என எண்ணினாள்.

அன்றுதான் நடந்தது அந்தச் சம்பவம் இப்போது நினைத்தாலும், நெஞ்சமெல்லாம் தீப் பிடிக்கிறது.

வேலை முடிந்து நானும் அவளும் சாலையில் வந்துக் கொண்டிருந் போது, என்னை சாலையோரம் தள்ளிவிட்டு எதிரில் வந்த பஸ்ஸில் பாய்ந்தாள். உடல் முழுதும் இரத்தம் பாய்ந்தது. உயிருக்கு போராடினாள்.

"ராதி .... ராதி....

இப்டி பன்னுன?"

"அம்மாவ பாத்துக. வருண் ஆசப்பட்ட வாழ்க நாயிருந்த கெடைக்காது "

"ஏன்டி என்ன விட்டு போய்டாத"

"தம்பி தம்பி...."

என கூறியவாறு, அவள் உயிர் இம்மண்னை விட்டு நீங்கியது. என்னால் அவளது பிரிவினை தாங்கிக் கொள்ள முடியவில்லை, மண்ணில் புரண்டு கத்தியழுதேன். சாலையில் யாரோ! அடிப்பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, வேகமாக வருண் காரில் சென்றான். நடந்ததை அவனிடம் சொல்லி அழுக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வருணின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தன்னுயிரை ராதிகா மாய்த்துக் கொண்டாள். அதனை நினைத்துக் கொண்டு, எதிர்ப்பாரத விதமாக தடுமாறி பஸ்ஸில் விழுந்துவிட்டதாக பொலிசாரிடமும், ராதிகாவின் அம்மா தம்பியிடம் கூறி உண்மையை மறைத்துவிட்டேன்.

ஒரு வருடத்திற்கு பின்னர், வருணும் மலரும் திருமணத்தில் இணைந்தார்கள். ராதிகாவின் ஆசைப் போல இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள்.

கடவுள் கொடுத்த வரங்களில் ஒன்று நம் உடன் பிறந்தவர்கள். அவர்ளின் அன்புக்கும் அரவணைப்புக்குக் இணையேதுமில்லை.

                         நன்றி!

 பரமசிவம் இந்துஜா

 இலங்கை.

 

 

15.K2K 00079

துணை

"அம்மாவோட விருப்பப்படி வர்ற வெள்ளிக்கிழமை காலையில வடிவுடையம்மன் கோயில்ல தாலிகட்டி மாலை மாத்தி திருமணம், அவரோட விருப்பப்படி பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பதிவுத் திருமணம். பதினொரு மணிக்கு ஹோட்டல்ல லஞ்ச்...மொத்தத்துல பத்து பதினைஞ்சு பேர்தானே.. அப்புறம் கொஞ்சநேரம் ரெஸ்ட். சாயந்தரம் அஞ்சுமணி ட்ரெயின்ல ஊட்டிக்கு கிளம்புறாங்க. ஒரு வாரம் அங்கதான்...ஊட்டி டிரிப்புக்கு அம்மா கொஞ்சத்துல ஒத்துக்கலை. நான்தான் வற்புறுத்தி டிக்கெட் புக் பண்ணேண்.. கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டுநாள் அம்மாவோட தங்க ஆசைப்படறேன்...குழந்தை சுமியோட நான் கிளம்பறேன். நீங்க எப்ப வர்றீங்க ராம்..." அபிராமி சொல்லிக்கொண்டே இருக்க சுரத்தேயில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ராம்குமார்.

"நீ எப்ப வேணா போ... ஆனா என்னை வற்புறுத்தாதே... எனக்கு இந்தக் கல்யாணத்துல உடன்பாடு இல்ல..."

'ஏன் ராம்...'

"என்னதான் பெண்கள் விடுதலை ..முற்போக்குச் சிந்தனைன்னு பேசினாலும் நாற்பத்தைஞ்சு வயசுல உங்கம்மாவுக்கு கல்யாணம் தேவையா..."

"போனவாரம் உங்க கம்பெனி எம்.டி அறுபது வயசுல இருபது வயசுப்பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டாரே...அந்தக் கல்யாணத்துக்கு நீங்கபோயி இளிச்சுகிட்டே கிப்ட் கொடுத்தீங்களே ...அப்ப கேட்க வேண்டியதுதானே இந்த கேள்வியை.."

"இதோ பார் அபி... அதுவேற இதுவேற... அவர் கல்யாணம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது... ஆனா ..இந்த கல்யாணம்..அப்படியா..என்ன ராம் உங்க மாமியார் இந்த வயசுல கல்யாணம் பண்ணிகிட்டாங்களாமேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது. "

"அது அவங்க சொந்த விருப்பம்னு சொல்லுங்க, பொறந்த எல்லோருக்கும் அவங்களோட வாழ்க்கையை விருப்பப்படி வாழறதுக்கு முழு உரிமை இருக்கு ராம்."

"அது மத்தவங்களுக்கு சங்கடத்தை உண்டாக்க கூடாது... "

"இதுல என்ன சங்கடமிருக்கு, நான் கைக்குழந்தையா இருந்தப்பவே எங்கப்பா எங்களைப் பிரிஞ்சுப் போயிட்டாரு. தனியொரு மனுஷியா போராடி என்னை வளர்த்தாங்க எங்கம்மா, நெருப்பு மாதிரி தன்னைச்சுத்தி வட்டம் போட்டுகிட்டு வாழ்ந்தாங்க இருபத்தைஞ்சு வருசம்.. என்னைத் தவிர வேற எதையும் சிந்திக்காதவங்க.. என் விருப்பத்துக்கு ஏத்தபடி வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்தாங்க..நான் அவங்களுக்கு என்ன செஞ்சுட்டேன். அம்மா கூட வேலை பார்த்த ஒருவர் பதினைஞ்சு வருசத்துக்கு   முன்னாடியே அம்மாவை விரும்பியிருக்காரு. அவரும் மனைவியை இழந்தவருதான். நான்தான் முக்கியம்னு நினைச்சு அன்னிக்கு எனக்காக அம்மா அந்த வாழ்க்கையை ஏத்துக்கல. அவரு வேற ஊருக்கு மாத்தல் வாங்கிட்டு போயிட்டாரு. சமீபத்துல எதேச்சையா அம்மாவை சந்திச்சவரு உனக்காக நான் இன்னும் காத்துகிட்டுதான் இருக்கேன்.  ரெண்டு பேரும் கடமைகளை முடிச்சாச்சு.  இப்பவாது நாம இணைஞ்சு வாழலாமான்னு கேட்டிருக்காரு, அம்மா என்கிட்ட தயங்கி தயங்கி சொன்னாங்க. நான்தான் இனிமே உனக்காக வாழறதுல எனக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொன்னேன். ஆனா படிச்ச நீங்க இவ்வளவு பிற்போக்குத்தனமா யோசிப்பீங்கன்னு நான் நினைக்கலை. நான் கிளம்பறேன். உங்களுக்கு விருப்பமிருந்தா வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு வந்து சேருங்க."  அபி கிளம்பி விட்டாள்.

இரவு ராம் சாப்பிட அமர்ந்தான், சப்பாத்தியும் குருமாவும் தட்டில் வைத்தாள் அம்மா.

 "என்னடா பலமா யோசிக்கற"

அம்மா கேட்டாள்.

"உனக்கு விஷயம் தெரியுமா. அபி ஏதாவது சொன்னாளா"

"எது... அவங்கம்மா கல்யாணமா..அவங்களே என்கிட்ட போன் பண்ணி சொன்னாங்க..."

"என்னம்மா... தெரிஞ்சுமா ஏதும் சொல்லாம இருக்க." ராம் ஆச்சரியப்பட்டான்.

"இதுல நாம சொல்ல வேண்டியது என்ன இருக்கு, அவங்க வாழ்க்கை. அவங்க முடிவு."

"என்னம்மா பேசற ...அவங்க வீட்ல பொண்ணு எடுத்திருக்கோம்..ஊர்ல நாலுபேர் நாலு விதமா பேச மாட்டாங்களா..."

 "ஊரு என்னடா ஊரு ..என்ன வேணா பேசட்டுமே.. எத்தனை நாள் பேசுவாங்க..அப்புறம் வேற விஷயம் கிடைச்சா அதை மெல்லப் போறாங்க..."

"அப்ப அவங்க செய்யறது தப்பில்லைன்னு சொல்றீயா..." வியப்பாய்க் கேட்டான் ராம்.

"இதுல என்ன தப்பு இருக்கு...ஆணோ பெண்ணோ கடைசிவரைக்கும் உணர்வுகளைப் பரிமாறிக்கத் துணை வேணும். உனக்கு அஞ்சு வயசிருக்கும் உங்கப்பா சாகும்போது... நடுக்காட்டுல தனியே விட்டமாதிரி எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... ஆறுமாசம் கழிச்சு அதே ஊர்ல எனக்கு வாழ்க்கை தர ஒருத்தர் முன்வந்தாரு. ஊரு ஒத்துக்காதுன்னு மறுத்துட்டாரு உங்க தாத்தா.. நடக்கறதை புரிஞ்சுக்கற மனநிலையில நான் அப்போ இல்லை. அப்பா சொன்னதுதான் சரின்னு நினைச்சேன். அடுத்து அப்பாவையும் இழந்த பிறகுதான் தவிச்சுப் போயிட்டேன். ஏதோ சொத்து இருந்ததால பணத்துக்கு கஷ்டமில்ல. ஆனாலும் என்னைக் காப்பாத்திகிட்டு உன்னையும் நல்லபடியா வளர்க்க நான்பட்ட துன்பம் அதிகம். தனியா போராடி களைச்சுப் போயிட்டேன், அதே நிலையிலதான் அபி அம்மாவும் இருந்திருப்பாங்க. உடல் தேடல் முடிஞ்சு மனத்தேடல் தொடங்கற வயசுடா இது. கடைசி காலத்துல அவங்களோட சேர்ந்து நடக்க தக்க துணை கிடைச்சிருக்கு. என்னை பொறுத்தவரைக்கும் நல்ல முடிவு இது. மனசார சொல்றேன். அவங்க நல்லபடியா வாழட்டும் ராம்."

பழமையில் ஊறிப்போனவள் என நினைத்த அம்மா மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் நெஞ்சை சுட்டன. எண்ண ஓட்டம் மாறியது.

"பட்டுவேட்டி எடுத்து வைம்மா... கல்யாணத்துக்கு கட்டணுமில்ல." ராமின் மனமாற்றம் வார்த்தைகளில் எதிரொலித்தது.

"ரொம்ப சந்தோசம்டா...  கால்வலியால என்னால கலந்துக்க முடியாது..சம்பந்திக்கு என்னோட பரிசா ஜோடியா தங்கமோதிரம் வாங்கியிருக்கேன்..கொடுத்துட்டு என்னோடவாழ்த்துகளையும் சொல்லிட்டு வாப்பா."

அம்மா சொல்ல நெகிழ்ச்சியாய்த் தலையாட்டினான் ராம்.

கருத்து:  துணை உடல் தேடலுக்கு மட்டுமன்று.. உள்ளப் பரிமாற்றத்திற்கும்தான்...

பெயர் கி. இலட்சுமி

 

 

16.K2K 00080

 அம்மா

செய்தி வந்தவுடன் பதைபதைப்புடன் கிளம்பி விட்டான் அரவிந்தன், "அம்மா, அம்மா! நாம் போய்ச் சேரும் வரை அம்மாவுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது. ஆண்டவனே! என்னைச் சோதிக்காதே! எனக்கு அம்மாவைப் பார்த்து ஒரு முறையாவது பேச வேண்டும், என்னுடைய வார்த்தைகளைக் கேட்க அம்மா இருக்க வேண்டுமே!", என்று அவனுடைய மனம் கிடந்து அல்லாடியது; மனம் கடந்த காலத்தை ஒரு முறை எட்டிப் பார்த்தது.

அரவிந்தன் தன்னுடைய பெற்றோருடன் கிராமத்தில் வசித்த நாட்களை எண்ணிப் பார்த்தான், கூட்டுக் குடும்பம், நிறைய அங்கத்தினர். விவசாயத்தை நம்பி வயலில் இறங்கிச் சளைக்காமல் உழைத்துக் கொண்டிருந்த அரவிந்தனின் அப்பா குடும்பத்தின் தலைமகன் அவர்; தான் படிக்காமல் தன்னுடைய தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தார். அரவிந்தனின் அம்மா மேகலை முகம் சுளிக்காமல் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு மாமனார்,மாமியாருக்குப் பணிவிடைகளும் தவறாமல் செய்தாள்.

குடும்பத்தைப் புயல் போலத் துயரங்கள் தாக்கின, வயலில் வேலை செய்து கொண்டிருந்த அரவிந்தனின் அப்பா பாம்பு கடித்து இறக்க வயலையும் வீட்டையும் சேர்த்து கவனித்தாள் மேகலை. அத்தனை பொறுப்புகளையும் நிர்வாகம் செய்தாலும் மதிப்போ மரியாதையோ கிடையாது. அரவிந்தனின் படிப்பிற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள்.

நல்ல வேளை அரவிந்தன் நன்றாகப் படித்து அரசாங்க வேலையிலும்சேர்ந்து விட்டான் சென்னையில், ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லி அம்மாவைத் தன்னுடன் சென்னைக்கும் கூட்டி வந்து விட்டான்.

தன் வருமானத்திற்கேற்ற வசதிகளுடன் எளிமையான வாழ்க்கை, அம்மாவை சந்தோஷமாக வைத்திருந்தான் அரவிந்தன், சரியாக இரண்டு வருஷங்கள் தான், அம்மா திரும்பத் திரும்ப அனத்தியதால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட அரவிந்தன் கல்யாணியை மணம் புரிந்து அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில் ஒழுங்காகத் தான் போனது எல்லாம், வந்த புதிதில் வேலை ஒன்றும் செய்ய விடாமல் பிரியத்துடன் அம்மா வேலை எல்லாவற்றையும் தானே செய்து வர அதில் அகமகிழ்ந்து போன கல்யாணி முழுச் சோம்பேறி ஆனாள்.

தன்னுடைய அம்மாவின் தவறான அறிவுரைகளை ஏற்று மாமியாரை நன்றாக வேலை வாங்கியதுடன் மரியாதையும் தரத் தவறினாள், வீட்டின் சம்பளமில்லாத வேலைக்காரி ஆனாள் மேகலை.

வாயில்லாப் பூச்சி அவள், அதிர்ந்து பேசிப் பழக்கமில்லை, மகனையும் அப்படியே வளர்த்திருந்தாள், கண் முன்னே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத கோழையாக நின்றான் அரவிந்தன், எதிர்த்துப் பேச முடியாமல் மனைவியின் அதிகாரத்தின் முன்னே அடங்கிப் போனான்.

குழந்தைகள் பிறந்தன! பேரக்குழந்தைகளின் முகம் பார்த்து இரசித்துக் கொண்டே அம்மா சிரித்த முகத்துடன் சமாளித்துக் கொண்டிருந்தாள், ஆனால் அரவிந்தனுக்குத் தான் பொறுக்கவேயில்லை, ஒருநாள் திடீரென்று முடிவு செய்து அம்மாவைக் கொண்டு போய்த் தாம்பரத்தில் இருந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வந்து விட்டான், அம்மாவிடம் ஒன்றுமே சொல்லவில்லை, கல்யாணியிடமும் கலந்து பேசவில்லை, கண்ணீருடன் விடை கொடுத்த அம்மாவின் வாடிய முகம் அவ்வப்போது மனதில் வந்து போகும்.

மாமியாரை வீட்டை விட்டு வெற்றிகரமாகத் துரத்திய பெருமிதத்துடன் கல்யாணி வேறு வழியில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

அம்மாவை அடிக்கடி போய்ப் பார்க்க நினைத்தாலும் ஏதேதோ காரணங்களால் முடியாமல் போனது, இதோ இன்று அம்மா மயங்கிக் கீழே விழுந்து விட்டாள் என்ற செய்தி வந்ததும் ஆஃபிஸிலிருந்து அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருக்கிறான்.

அம்மா மருத்துவமனையில் நினைவு வந்து கண் விழித்தாள், அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த அரவிந்தனைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் மலர்ச்சி.

"அம்மா என்னை மன்னிச்சுடும்மா, நான் பிறந்ததில் இருந்து நீ வேலை வேலைன்னு வேலை செஞ்சுட்டே இருந்தது என் கல்யாணத்துக்கு அப்புறமும் தொடர்ந்தது என் மனசுக்குப் பிடிக்கலைம்மா, இங்கேயாவது நீ உன்னோட வயதுக்கு ஏத்த ப்ரண்ட்ஸ் கூட நிம்மதியாக இருக்கலாமேன்னு தான்மா இங்கே கொண்டு வந்து சேத்தேன். ஒங்கிட்டே கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன்னு தான் கேக்காமயே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை மன்னிச்சுடும்மா",

அவன் சொன்னதைக் கேட்டு முடித்ததும் மேகலையின் தலை சாய்ந்தது மகனுடைய மடியில், மகனைப் புரிந்து கொண்ட நிறைவு அவள் முகத்தில் புன்னகையாக அப்படியே உறைந்து போனது.

அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

-புவனா

 

 

17.K2K 00081

 மருதாணி

மூன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகள் தாராவுக்கு எட்டு வயது. புத்திசாலி குழந்தை ரொம்ப சுட்டியும் கூட. ஒரு நாள் என்னிடம் வந்து, "அம்மா, எனக்கு மெஹெந்தி வெச்சுவிட்ரியா.." என்றபோது ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால் அவளுக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. "மெஹெந்தி பத்தி உனக்கு எப்படி தெரியும்..?"

"என் ஸ்கூல் பிரண்ட் கைல வெச்சுருக்கா. பாக்க அழகா இருக்கும்மா. எனக்கும் வெச்சுக்கணும்னு ஆசையா இருக்கு ....." அழகாய்க் கெஞ்சினாள்.

மகள் கேட்டுவிட்டாளே என்று பக்கத்து கடையில் சென்று ஒரு மெஹெந்தி கோன் வாங்கி அவள் சின்னஞ்சிறு கைக்கு வைக்கத் தொடங்கினேன். மனதில் என் பிள்ளைப்பருவ ஞாபகங்கள் அலைபாய்ந்தன.

நான் பிறந்து வளர்ந்தது மேலூர் என்ற கிராமம். பச்சை பசேலென்ற புல்வெளி, வழிநெடுக்க மரங்களென ஒரு சொர்க்கம் போல காட்சியளிக்கும் எங்கள் ஊர். பள்ளிப்பருவத்தில் எனக்கு மருதாணி என்றால் உயிர். அதன் நறுமணத்தின் மீதும் அதை வைத்துக்கொண்டதால் வரும் சிகப்பு நிறத்தின் மீதும் எனக்கு அலாதிப் பிரியம். என் செல்லப் பெயரே மருதாணி ரேவதி என்னுமளவிற்கு இருந்தது மருதாணி மீதான என்னுடையக் காதல்.

எங்கள் வீட்டிலிருந்த மருதாணிச் செடியை என் குழந்தைபோல் பாதுகாத்து வந்தேன். அதற்கு தண்ணி ஊற்றுவது, உரம் போடுவது, தேவையானபோது வெட்டி விடுவது போன்ற அனைத்தும் என் பொறுப்பு. என் செடி நன்றாக வளர்ந்து ஒரு மரம் போல காட்சியளித்தது. ஊரில் எவர் வீட்டில் விசேஷம் என்றாலும் எங்கள் வீட்டிலிருந்து தான் மருதாணி வாங்கிச் செல்வார்கள்.

இப்படியாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென்று ஒரு நாள் எங்கள் தெருவில் ரோடு போடும் இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்வதற்கு ஊர் பஞ்சாயத்தின் ஏற்பாடு. சாலையை சரி செய்வதோடு கொஞ்சம் விரிவு செய்யவும் உத்தரவாம். எங்கள் வீட்டோரம் இருக்கும் மருதாணிச் செடியை வெட்ட வேண்டுமென்றார்கள். எனக்கோ ஒரு நிமிடம் இதயம் நின்றுவிடும் போலிருந்தது. பிள்ளைபோல் வளர்த்தச் செடியை வெட்டுவதா என்று அவர்களோடு வாக்குவதம் நடத்தினேன். காலெக்டரிடம் மனு கொடுப்பதாய்க் கூறினேன். யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை. இறுதியில் என் அம்மா என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

என் கண் முன்னே மருதாணிச் செடி வெட்டப்பட்ட போது தாரை தாரையாக கண்ணீர் வடித்தேன். ஒரு வாரம் மௌனத்திலும் வேதனையிலும் ஓடியது. என்னை சந்தோஷப் படுத்துவதற்காக அப்பா வேறு ஒரு செடியை வாங்கி வீட்டில் வைத்தார். ஆனால் எதுவுமே என் மருதாணிச் செடிக்கு ஈடாகவில்லை. வருடங்கள் ஓடின... செடி இல்லையெனினும் அதன் மணம் என் நாசியில் அவ்வப்போது வந்துசெல்லும்...

"அம்மா.... மெஹேந்தி வெக்க சொன்னா என்ன கனவு கண்டுகிட்டு இருக்க? ஒழுங்கா வெச்சுவிடுமா..." செல்லமாய் அதட்டினாள் தாரா. லேசாய் புன்னகைத்து வைத்துவிடத் தொடங்கினேன். ஏனோ இந்த மெஹேந்தியின் வாசம் என் மருதாணியின் நறுமணத்திற்குக் கொஞ்சம் கூட ஈடாகவில்லை என்றே தோன்றியது.

 மருதாணி வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசையாய் இருக்கின்றது. உங்கள் வீட்டில் மருதாணி இருந்தால் கொஞ்சம் தாருங்களேன்!?

நீதி: இயற்கையை என்றுமே மிஞ்ச முடியாது. இயற்கையோடு இணைந்திருப்போம், மகிழ்ச்சியாய் வாழ்ந்திருப்போம்!

Narmada

 

 

18.K2K-00084

தங்களின் விருப்பம்

ஒன்பதாம் வகுப்பு நுழைந்தேன். பல நடுநிலைப் பள்ளிகளில் எட்டு வரை படித்தவர்களும் என் வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்தனர்.

போதாக் குறைக்கு ஒருசில ஆசிரியர்களும் புதிதாக மாறுதலில் வந்திருந்தனர், அது ஒரு அரசு பள்ளி ஆதலால்.

புதிய தமிழாசிரியை சென்னையில் இருந்து மாறுதலில் எங்கள் கிராம பள்ளிக்கு வந்திருந்தார்.

எல்லோர் பெயரையும் கேட்டு அறிந்தார். கடைசியாக நான் உங்கள் பெயர் என்ன என்று கேட்ட போது, சற்று கனிவாக கடிந்து கொண்டார்.

இது என்ன அதிகப் பிரசங்கித்தனம். நான் ரொம்ப டிஸிப்பிளினை எதிர்பார்ப்பேன்,” என்றார்.

நான் அதை நினைத்தால் இன்றும் வியந்து கொண்டு இருக்கிறேன் - அதில் என்ன டிஸிப்ளினுக்குப் பங்கம் வந்தது என்று.

ஆனால் நான் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன். நாட்கள் செல்ல செல்ல பழக்கம் சாதாரணம் ஆகி விட்டது.

அறிவியலுக்கு ஒரு புதிய ஆசிரியை வந்து சேர்ந்தார். அவர் பெயர் கேட்க பயந்து விட்டேன்.

ஆனால், “டீச்சர், உங்களுக்கு எந்த ஊரு?” ன்னு கேட்டு விட்டேன்.

அவரும் புன்சிரிப்புடன், “பனந் தூரில் பாதித் தூருன்னு பதில் தந்தார்.

அது அன்றும் புரிய வில்லை. இன்றும் புரிய வில்லை. அது போகட்டும்.

அவர் முதல் நாளில் நடத்திய பாடம் அறிவியலில் வேதியியல் பிரிவில் குளோரின் என்ற பாடம். நாங்கள் மாணவர்கள் அந்த ஆசிரியைக்குகுளோரின்டீச்சர் என்றே பெயர் வைத்துக் கொண்டோம்.

அவர் யார் யார் சிபாரிசையோ பிடித்து மூன்றே மாதங்களில் மாறுதல் பெற்று சென்று விட்டார்.

அவருக்குப் பதிலாகத மாறுதலில் ஒரு புதிய ஆசிரியை வந்து சேர்ந்தார்.

அவரிடம் பேரையோ ஊரையோ கேட்கப் பயந்து வாயில் கற்பனையில் திண்டுக்கல் பூட்டு ஒன்றை மாட்டி, சாவியை சன்னல் வழியே எறிந்து விட்டேன்.

அப்பாடா என்று சற்று நிம்மதியாக இருந்தது.

வந்த ஆசிரியை தான் தூத்துக்குடியில் இருந்து வந்தேன் என்றார். பூட்டிய வாயில் இருந்தும் புன்னகை பூத்துக் குலுங்கியது.

அவர் மேலும் சொன்னார், “பைபிளில் இருந்து நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து வைக்கப் பட்ட பெயர் என் பெயர். ஆனால் அதை நான் சொன்னாலும், நீங்கள் அந்த பெயரில் அழைக்கப் போவதில்லை. குண்டு டீச்சர், குட்டைக் கத்தரிக்காய், கோண கழுத்து, பூனைக் கண்ணு என்று ஏதோ ஒரு பெயரில், தங்கள் விருப்பப் படிதான், அழைக்கப் போகிறீர்கள்என்றார்.

இதைக் கேட்டு வகுப்பு முழுவதும் உறைந்து போனது. புன்னகை பூத்திருந்த என் முகம் எமோஷனல் ஆகி கண்கள் ஈரம் ஆகின்.

எல்லா ஆசிரியர் போல் இல்லாமல் தங்கள் விருப்பம் என்னவோ அந்த பாடமே நாம் இன்று தொடங்குவோம் என்றார். நாங்கள் கோரஸாக தாவர இயலைத் தொடங்குங்கள் என்றோம். மகிழ்வோடு பல படங்களை வரைந்து விளக்கமாக, உற்சாகமாக, சற்று வேடிக்கையாகவும் பாடம் எடுத்தார்.

அதே போல மாதத் தேர்வு வரும் போது, எந்த போர்ஷன் வைக்க வேண்டும் என்பதும் தங்கள் விருப்பம் என்று மாணவர்களிடமே கூறுவார்.

நாங்கள் அந்த ஆசிரியரைதங்கள் விருப்பம் டீச்சர்என்றே குறிப்பிட ஆரம்பித்தோம். பரிகாசத்துடன் அல்ல; பாசத்தைடனும், பரிவுடனும்.

ஒருவாரம் தங்கள் விருப்பம் டீச்சர் வரவில்லை. ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்தோம்.

ஞாயிற்றுக் கிழமை காலை நானும் என் வகுப்பு மாணவர்கள் 5 பேரும் சேர்ந்து டாயல் பஸ்ஸை பிடித்து தூத்துக்குடி ஆஸ்பத்திரி சென்றடைந்தோம்.

டீச்சர் பெயர் கூட தெரியாமல், ரிஸப்ஸனில் சென்று, எங்கள் அறிவியல் ஆசிரியரை பார்க்கணும்னு சொன்னோம்.

ரிஸப்ஸனிஸ்ட் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு இளைஞர் வந்து, எங்களை கூட்டிச் சென்றார்.

அவர் ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் சென்றார். அதிகாரி இளைஞரிடம் சொன்னார், “ ஸி யூ வில் ஒருவர் மட்டுமே அனுமதி; உங்களுக்கு தெரியும்லாஎன்றார்.

அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசி 5 நிமிட அனுமதி பெற்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே தங்கள் விருப்பம் டீச்சருக்கு சில மருந்து பாட்டில்கள் ஏறிக் கொண்டிருந்தன.

பையில் கொண்டு வந்த ஆரஞ்சுப் பழங்களை இளைஞரிடம் கொடுத்தேன். இளைஞன் அம்மாவிற்கு சாப்பிட முடியாது என்றான். அவர் டீச்சர் மகன் என அறிந்து கொண்டோம்.

எங்களைப் பார்த்த டீச்சர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. எங்கள் கண்களில் வெள்ளம்.

டீச்சர் ஜூஸா கொடுன்னு மகன் கிட்ட சொல்ல, மகன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான்.

டீச்சர் என்னைக் கிட்டே அழைத்து, “எனக்கு என்ன பெயர் வைத்தீர்கள்?” என அன்பாக மெதுவான குரலில்கேட்டார்.

அழுகை கலந்த குரலில், “தங்கள் விருப்பம் டீச்சர்என்றேன்.

என் கண்களைத் துடைத்து, கைகளைப் பிடித்துக் கொண்டே தன் கண்களை மூடிக் கொண்டார் நிரந்தரமாக.

டீச்சர் மகன் சொன்னான்:

வீட்டிலும் எங்களுக்கு உணவு, உடை எதுவானாலும், தங்கள் விருப்பம் என்று எங்களிடமே விட்டு விடுவார்கள் அம்மா. “

கேன்ஸரில் அவதிப் பட்ட எங்கள் அம்மா கடந்த இரண்டு நாட்களாக தங்கள் விருப்பமாக ஒன்றே ஒன்றை சொல்லிக் கொண்டு இருந்தார்கள் - ‘நான் கண்களை மூடும் முன்பு என் 9ஆம் வகுப்பு குழந்தைகளை ஒரு முறை பார்க்க கர்த்தர் அருள வேண்டும்என்று

நானும் கர்த்தரிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்தேன்.  கர்த்தரும் மனம் இரங்கி தன் குழந்தை அக்னெஸ் அலிமா அஅன்ஸியின் விருப்பத்தை உங்களை வரவழைத்து நிறை வேற்றித் தந்தார்”.

கலங்கிய கண்களுடன் பேருந்தில் ஏறி அமர்ந்தோம், வீடு திரும்ப.

Moral/ நீதி: பிறர் விருப்பத்தை நாம் நிறைவேற்றினால், நம் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றுவார்.

-சிறுத்தொண்டன் சு.லி. பாண்டியன்

 

 

19.K2K-00098

நேர்மை            

       காலை 8:20 மின்தொடர் வண்டி தன் நீண்ட உடலை வளைத்து இரயில் நிலையத்தின் தூரே வந்து கொண்டிருந்தது. தன் தோள் பை அசைய அகிலா தன் அலுவலக தோழி தேன்மொழியின் வரவை எட்டி எட்டி பரபரப்புடன் பார்த்தாள். இரயில் உள்ளே நுழையவும் தேன்மொழி வேகமாக ஓடி வரவும் சரியாக இருந்தது. பரஸ்பரம் பார்த்துக் கொண்ட தோழிகள் மூச்சிரைக்க மகளிர் பெட்டி கூட்டத்தினுள் ஐக்கியமாகினர். சாதித்துவிட்ட சிரிப்பு இருவர் முகத்திலும். அகிலா, தேன்மொழி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரே பகுதியில் வசிக்கும் தோழிகள். அகிலா அனைவருடன் சகஜமாக பழகுவாள். ஆனால் தேன்மொழியை பேச வைப்பது எளிதல்ல. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே விடை தருவாள். போன் பண்ணுனது நீ பேசிட்டே இருக்குறது மட்டும் நானா என பலமுறை அகிலா கூட செல்லமாக கோபிப்பாள்.

                என்ன தேனு பிள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்குனு சொன்னியே பணம் ஏற்பாடு பண்ணிட்டியா என்றாள் அகிலா. இல்ல அகிலா என் கணவருக்கும் வேலை சரியாக இல்லை. சக்திக்கு மீறி இரண்டு பிள்ளைங்களையும் பெரிய பள்ளியில சேர்த்துட்டேன். என்ன பண்றதுனே தெரியல. கழுத்துல இருக்குற தாலி செயினதான் அடகு வைக்கனும் போல எனக் கூறினாள் தேன்மொழி. தொடர்வண்டி போல அவர்களது பேச்சும் சிரிப்பும் தொடர்ந்தது. அலுவலகம் அடைந்த இரு தோழிகளும் தத்தம் வேலையில் மூழ்கினார்கள்.

           மதியத்துக்கு மேல் தேன்மொழியின் இருக்கைத் தேடி லக்ஷ்மி தேவி வந்தாள். ஆனால் குறுக்கு வழியில். அவள் புதிதாக பொறுப்பேற்ற பிரிவில் நீண்ட நாள் நிலுவைக் கோப்பு பணி நியமனம் சார்ந்தது. அதை ஒப்புதலுக்காக மேலதிகாரிக்கு எழுதி வைக்க தேன்மொழிக்கு முன்னால் இருந்தவர் பேரம் பேசிய விலை படியாமல் அக்கோப்பு நகராமல் நிலுவையாக இருந்தது. புது எழுத்தர் மாறியதை அறிந்த சம்பந்தபட்ட நபர் அவளை சந்திக்க வந்தார். மேடம், முன்னாடி இருந்தவர் கேட்ட தொகையை கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில நான் இருக்கேன். என்னால் முடிந்தது இதுதான். இதைப் பெற்றுக் கொண்டு எனது கோப்பை முடித்து தாங்கமா. இந்த வருமானத்த நம்பிதான் என் குடும்பமே காத்திருக்கு என்றார் வந்தவர்.

தேன்மொழி அவரைப் பார்த்து நிதானமாக ஆனால் அழுத்தமாக கூறினாள். இங்க பாருங்க சார், உங்க கோப்பு சரியா இருந்தாலே போதும். அது தானாக அடுத்த கட்டத்திற்கு போகும். இதெல்லாம் தேவையில்லாதது. தயவு செய்து கிளம்புங்க என்றாள். வந்தவர் சிறு நம்பிக்கையுடன் புறப்பட்டார்.

அன்று மாலைக்குள் அக்கோப்பின் மீது நடவடிக்கை எடுத்து மேலதிகாரியின் மேசையில் வைத்துவிட்டாள் தேன்மொழி. பக்கத்து இருக்கையில் இருந்து அதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் அகிலா.

மாலை தோழிகளின் தொடர்வண்டி பயணத்தின் போது அகிலா தயக்கத்துடன் கேட்டாள், ஏண்டி தேடி வந்த பணத்த வேண்டாம்னு சொல்லிட்ட. அதற்கு தேன்மொழி,  இங்கபாருடி என் பிள்ளைங்களுக்கு காசு பணம் சொத்துனு பெருசா சேர்த்து வைக்கலனாலும் பாவத்த சேர்த்து வச்சுட்டு போக மாட்டேன். அது பாவப்பட்ட பணம். வயிறு எரிஞ்சு கொடுக்கப்படுற இலஞ்சப் பணம் என் வீட்டையும் எரிய வச்சுடும். அது மட்டுமில்ல  சம்பளம் வாங்கிட்டுதான் நான் இந்த வேலைய செய்றேன். அதுக்குள்ள ஏண்டி இன்னொரு சம்பளத்த எதிர்பார்க்கனும் என்றாள். தன் தோழியை பெருமையுடன் பார்த்து சிரித்தாள் அகிலா.

நேர்மையே சிறந்த சொத்து

-கவிதா

 

 

20.K2K 00099

அழகான காலை நேரம் உமா தன் ஒர்கவுட் முடிந்து விட்டு ஓரு கிறீன் டீ கோப்பையுடன் பால்கனிக்கு வந்து கிரில் கதவை திறந்து நல்ல காற்றை (?) உள் இழுத்தாள். இவளை பார்த்ததும் எதிர் பால்கணியில் அமர்ந்து இருந்த காமாட்சி பாட்டி படக் என்று எழுந்து உள்ளே போனாள் அதை பார்த்த உமாவுக்கு சிரிப்பு வந்தாலும் மனது வலித்தது உள்ளே வந்த பாட்டியிடம் அவள் கணவர்,

" ஏம்மா இப்படி பண்ற.  அது குழ்ந்தை. அதன் மேல் உனக்கு ஏன் அர்த்தம் இல்லாத கோபம். நம் பையன் நாம் பார்த்த பெண்ணை கட்டிக்காம காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டான் என்பதற்காக எல்லா காதல் கல்யாண தம்பதியையும் வெறுப்பது என்ன நியாயம்? " என்றார்.

காமாட்சி ஒன்றும் பதில் சொல்ல வில்லை.   ஒரே பிள்ளை டீ யில் நல்ல சம்பளத்தில் வேலை. பெரிய இடமாக பார்த்து நல்லா கல்யாணம் பண்ண வேண்டும் என பாட்டிக்கு ஆசை. ஆனால் அவன் தன்னுடன் படித்த ஓரு ஏழை பெண்ணை அம்மா விருப்பத்திற்கு மாறாக கல்யாணம் பண்ணினான் என்பதால் இருவரையும் பாட்டி ஏறெடுத்து பார்ப்பதில்லை..

பிள்ளை மருமகள் கெஞ்சி பார்த்தும் பாட்டி ஏற்று கொள்ளவில்லை. மருமகள் நல்ல பெண்.  வீட்டை இவர்களுக்கு கொடுத்து விட்டு இருவரும் அமெரிக்கா போய் விட்டார்கள் அப்பா ராசி அவ்வப்போது போனில் பேசுவார்.  மாதா மாதம் டான் என்று பணம் வந்து விடும் அப்போதுதான் எதிர் வீட்டுக்கு உமா குடி வந்தாள். புது கல்யாணம் காதல் இரு குடும்பமும் கை விட்ட நிலை.  இருவரும் சம்பாதித்து குறைவு எதுவும் இல்லை.  காதல் கல்யாணம் என்று கேட்டவுடன் காமாட்சி பாட்டி அந்த பக்கம் கூட திரும்புவது இல்லை.  வழக்கம் போல தாத்தா ராசி.  அவர் பேசுவார்.  பாட்டி இயல்பில் நல்ல குணம்.  ஏமாற்றம் தந்த விரக்தி அவள் மனம் கல்லாய் ஆகி விட்டது.

மறுநாள் பாட்டி பால்கனி பக்கம் அடிக்கடி போய் பார்த்துவிட்டு வந்து இருப்பு கொள்ளாமல் அலைந்தால்.

தாத்தா பொறுக்காமல் என்னவென்று கேட்டார்.  முதலில் பதில் சொல்லாத பாட்டி இன்னும் இருமுறை பால்கனிக்கு போய் வந்து தாத்தாவிடம், " ஓரு பொறுப்பு எடுத்து கொண்டால் அதை சரியாக செய்ய வேண்டும் "   என்று கடுத்தாள்.

"என்ன பொறுப்பு, எந்த மந்திரியும் எனக்கு எந்த பொறுப்பும் தரவில்லை " என்று சிரித்தார் தாத்தா.

" எதிர் வீட்டு பையன் வெளியூர் கேம்ப் போகும்போது உங்களிடம் என்ன சொன்னான் "

" என்ன சொன்னான் " தாத்தா.

"அவன் பொண்டாட்டி பிள்ளைத்தாச்சி சித்த பாத்துக்கோங்க.  எங்களுக்கு யாரும் இல்லைன்னு சொன்னாள்லயே "

"ஆமாம் நெத்தி பாத்தேன்.  அந்த பொண்ணு ஒர்க் பிரேம் ஹோம் செய்யறா உனக்குத்தான் பிடிக்காதே இப்போ என்ன? "

"ஒண்ணுமில்ல எனக்கு என்ன.  இப்போ மணி பத்து.  காலையில் இருந்து அந்த பொண்ணு பால்கனி கதவை திறக்கலே.  பாவம் பிள்ளைத்தாச்சி.  மசக்கை படுத்தும் அவன் வேற இல்லை.  சித்த போய் ஓரு எட்டு பாத்துட்டு வாங்களேன்.  எனக்கு ஒன்னும் இல்லை.  உங்களுக்கு சொன்ன வார்த்தை காப்பாத்தணும் இல்லை அதுதான". என்றாள்

தன் வீம்பை விடாமல், தாத்தாவுக்கும் அவள் சொன்னது சரி என்று பட உடன் எதிர் வீட்டுக்கு விரைந்தார்.

நல்ல வேளை கதவு திறந்து இருந்தது.  திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி சோபாவில் உமா சுருட்டி கொண்டு படுத்திருந்தாள்.  வாந்தி எடுத்து துடைத்து விட்டிருப்பாள் போல அது ஓரு பக்கம் சரியாக துடைக்காமல் காய்ந்து கிடந்தது இவர் போய் உமா உமா என்று கூப்பிட்டதும் கண் முழித்து பார்த்த உமா ஓவென்று கதறி

, "அப்பா ஒரே மயக்கம், வாந்தி, தலைசுற்றல் சிறிது வயிறு வலியா பசியா என்று தெரியாமல் சுன்டி இழுக்கிறது.  ராம் வேறு இல்லையா.  நான் அனாதை என்று பீலிங்கா இருக்கு அப்பா " என்றவாறு மீண்டும் அழுகையை தொடர்ந்தாள்.

செய்யறதை எல்லாம் செய்து விட்டு பிள்ளைத்தாச்சி பொண்ணு என்னா அழுகை " என்ற ஓரு கம்பிர குரல் கேட்க திரும்பிய தாத்தாவிற்கு ஒரே ஆச்சரியம்.  அங்கே காமாச்சி பாட்டி.  உமாவுக்கு அவளை பார்த்தவுடன் அம்மா என்று ஒரே அழுகை

" அழக்கூடாது அம்மா வந்து விட்டேன்.  நீ இரு நான் சூடாய் ஹார்லிக்ஸ் கரைச்சு தரன்.  அப்புறம் அப்பா இங்கே இருக்கட்டும் நான் வீட்டுக்கு போய் உனக்கு சூடா ரசம் சாதம் சாப்பாடு கொண்டு வரேன் " என்று சொல்லி விட்டு அவளை எழுப்பி, வெண்ணீர் போட்டு கை கால் கழுவச்சொல்லி அதற்குள் வாந்தி சுத்தம் செய்து ஹார்லிக்ஸ் போட்டு என்று பம்பரமாக சுற்றும் தன் மனைவியை வியப்பாக பார்த்தார் தாத்தா.

தாய்மை எப்போதும் ஒருவரை விட்டு போவதில்லை சந்தர்ப்பம் கிடைக்கும்போது அது தன் நல்ல குணத்தை காட்டும்.  இதே சூடோடு தன் பையனிடம் பேசி அம்மாவோட பேச வைக்க வேண்டும் என முடிவு பண்ணினார் தாத்தா ஏனனில் மருமகளும் இப்போது கர்ப்பவதி.

தாய்மை உன்னதமானது வீம்பு காட்டுவதில்லை.  கஷ்டம் என்றால் சட்டென அரவணைக்கும்

வாழ்க தாய்மை!!!

KK MADAM

 


Comments

Popular posts from this blog

Father

LGBTQ & DISABILITY